Samantha Ruth Prabhu: ‘என்னை நெகட்டிவ்வாக பேசினால் அதுதான் நடக்கும்’ – சமந்தா அதிரடி பேச்சு! | TV9 Tamil News

Samantha Ruth Prabhu: ‘என்னை நெகட்டிவ்வாக பேசினால் அதுதான் நடக்கும்’ – சமந்தா அதிரடி பேச்சு!

Updated On: 

09 Mar 2026 20:22 PM

 IST

Samantha On Social Media Habits: தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

1 / 5தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தென்னிந்திய மொழிகளில் ஆக்ஷன் வேடங்களில் நடித்து பிரபலமாகிவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் நடிகையாக மட்டுமில்லாமல், சினிமாவை தாண்டி பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். மேலும் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தென்னிந்திய மொழிகளில் ஆக்ஷன் வேடங்களில் நடித்து பிரபலமாகிவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் நடிகையாக மட்டுமில்லாமல், சினிமாவை தாண்டி பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். மேலும் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

2 / 5

நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்துள்ளது. சில படங்களில் கேமியோ வேடத்தில் மட்டுமே நடித்துவந்தார். தற்போது ஃபிட்னஸ் குயினாக ரசிகர்களை கவர்ந்துவருகிறார். மேலும் இவர் தயாரிப்பாளராக படங்களை தயாரிக்க தொடங்கிய நிலையில், தற்போது இவரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் மா இன்டி பங்காரம்.

3 / 5

இந்த மா இன்டி பங்காரம் திரைப்படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு, ஆக்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஹோ பேபி திரைப்படத்தை இயக்கியிருந்த, பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ளர். அதிரடி ஆக்ஷன் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ளது. இப்படம் வரும் 2026 மே 15ம் தேதியில் வெளியாகவுள்ளது.

4 / 5

அந்த வகையில் தற்போது சமந்தா அடுத்த படத்திற்காகவும் தயாராகிவருகிறார். மேலும் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நேர்காணலில் பேசிய இவர், தனது சமூக ஊடக பயன்பாடு மற்றும் தன்னை பற்றி தவறாக பேசுபவர்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

5 / 5

நடிகை சமந்தா அந்த பேட்டியில், நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டைம் டேபிள் போதுதான் படிப்பேன். எனக்கு எதிலும் கவன சிதறல் இருக்காது. தற்போது அப்படி இருக்க முடியுமா? என தெரியவில்லை. இன்ஸ்டா ரீல்ஸ் பார்ப்பதால் வரும், ஃபியர் ஆப் மிஸ்ஸிங் அவுட் பயம் மிகவும் மோசமானது. அதனால் நான் பெரும்பாலும் இன்ஸ்டாகிராமை லாக் செய்துவிடுவேன். வேண்டுமென்றே போரிங்கான, விஷயங்களளை செய்வேன். என்னை பற்றி தவறாக பேசுபவர்களை உடனே நான் பிளாக் செய்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

Follow Us