சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறு… அபிஷேக் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் – கம்பீர் கொடுத்த அட்வைஸ் | TV9 Tamil News

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறு… அபிஷேக் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் – கம்பீர் கொடுத்த அட்வைஸ்

Published: 

16 Mar 2026 15:57 PM

 IST

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து 3 டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அப்போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், அதில் எப்படி மீண்டு வந்தார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

1 / 5பிரபல கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்பையின் போது அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அவர் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

பிரபல கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்பையின் போது அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகளிலும் அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அவர் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

2 / 5

இந்த சூழ்நிலையில் அபிஷேக் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவரை இந்திய சீனியர் வீரர்கள் உற்சாகப்படுத்தியதாகவும் அபிஷேக் சர்மா தெரிித்துள்ளார்.

3 / 5

இது தொடர்பாக இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் சர்மா, 3 போட்டிகளில் டக் அவுட் ஆன போது அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் என்னிடம், சோஷியல் மீடியாவை போனில் நீக்குமாறு அறிவுரை வழங்கினர் என்று தெரிவித்தார்.

4 / 5

மேலும் பேசிய அவர், சமூக வலைதளங்களை எனது போனில் இருந்து நீக்கியது எனக்கு மன அமைதியைக் கொடுத்தது என்றார். ரசிகர்கள் உங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு வைப்பார்கள். சில நேரங்கள் உங்களால் அதனை காப்பாற்ற முடியும். சில நேரங்களில் முடியாது. விமர்சனங்களை கேடக வேண்டும் ஆனால் அதனை மனதில் கொள்ளக்கூடாது என்றார்.

5 / 5

பலரும் பல ஆலோசனைகள், கருத்துகள் கூறிக்கொண்டே இருந்தனர். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களிடம் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைப்பார்கள். சில நேரங்களில் நீங்கள் சாதிப்பீர்கள், சில நேரங்களில் முடியாது. விமர்சனங்களை கேட்கவேண்டும், ஆனால் அதை மனதில் கொள்ளாமல் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Follow Us