அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது! – பிரதமர் மோடி
India-Pakistan Crisis: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், பிரதமர் மோடி டெல்லியில் அனைத்து துறைச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. எல்லைப் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி மே 08: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Modi) டெல்லியில் (Delhi) அனைத்து துறை செயலாளர்களுடன் அவசர ஆலோசனை (Emergency Meeting) நடத்தினார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பயங்கரவாத முகாம்களை தாக்கியதைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தான் அமிர்தசரஸில் ஏவுகணை வீசியது. இதனால் எல்லைப் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, மாநில நிர்வாகங்களும் தளத்தில் செயல்படும் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் தொடர்பாக அனைத்து அமைச்சுகளும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து துறை செயலாளர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அனைத்து துறை செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாக நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலை மிகுந்த கடுமையானதாக இருப்பதால், அனைத்து துறை செயலாளர்களும் ஒரே கூழில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நெருக்கமான ஒத்துழைப்பை பேண வேண்டும்: பிரதமர் மோடி
இதே நேரத்தில், மாநில நிர்வாகங்கள் மற்றும் தளத்தில் செயல்படும் நிறுவனங்களுடனும் நெருக்கமான ஒத்துழைப்பை பேண வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சுகள் திட்டமிடும் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும், பாதுகாப்பு தொடர்பான எந்த அபாயத்தையும் கவனிக்கத் தவறாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அவசரக் கூட்டத்திற்கு முன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து, பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் வான்வழி ராணுவ நடவடிக்கை
இந்நிலையில், கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் வான்வழி ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது. இதில் 100 பயங்கரவாதிகள் மரணமடைந்ததாக பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் பஞ்சாப்பின் அமிர்தசரஸை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த சோதனைத் தாக்குதல் காரணமாக எல்லைப் பகுதி மாவட்டங்களில், குறிப்பாக பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா, ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜோரி பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பல்கலைக்கழகத்தின்போதைய அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பாதுகாப்பு நிலைமை தீவிரமடைந்துள்ளது-பிரதமர் மோடி
மேலும், போர்க்கால நெருக்கடி காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூரில் இரவு நேரங்களில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானப்படை மற்றும் தரைத்தள ராணுவம் உயர் மட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. நாடு போருக்குத் தயாராக உள்ளதா என்ற அளவுக்கே பாதுகாப்பு நிலைமை தீவிரமடைந்துள்ளதைக் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு ஆயத்தம் மற்றும் நெருக்கடியான நிர்வாக இயக்கங்கள் குறித்து பிரதமர் நேரடி மதிப்பீடு செய்து வருகிறார். இந்நிலையில், நாட்டின் பொதுமக்கள் மற்றும் முக்கியமான கட்டமைப்புகளை பாதுகாக்கும் வகையில், தேசிய ரீதியாக உள்நோக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.