Rajinikanth : பேரனின் பட்டமளிப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
Rajinikanths Grandson Yathra Graduates : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் ரஜினிகாந்த். இவரின் பேரனும், நடிகர் தனுஷின் மூத்த மகனுமாகிய யாத்ரா தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிலையில், பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் யாத்ரா இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவையும் கடந்து, பான் இந்தியா அளவிற்கு மிகவும் பேமஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் வேட்டையன் படத்தைத் தொடர்ந்து, கூலி (Coolie) மற்றும் ஜெயிலர் 2 (Jailer 2)போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேரனும், நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் (Aishwarya Rajinikanth) மகனுமான யாத்ரா (Yathra) தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் யாத்ரா பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைந்து கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “PROUD PARENTS” என்று பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தனது பேரன் யாத்ராவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணத்தில், நடிகர் ரஜினிகாந்தும் தனது எக்ஸ் பக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.




நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
First milestone crossed my lovable grandson 💐 congratulations yathra kanna ! ❤️❤️ pic.twitter.com/D15JexNw4g
— Rajinikanth (@rajinikanth) May 31, 2025
பேரனுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் :
அந்த பதிவில் நடிகர் ரஜினிகாந்த், “தனது அன்பான பேரன் யாத்ரா முதல் மைல்கல்லைக் கடந்துவிட்டார், வாழ்த்துக்கள் யாத்ரா” என்று அதில் எழுதியுள்ளார்.
ரஜினியின் புதியப் படம் :
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2024ம் ஆண்டு வெளியான வேட்டையன் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவ ஆகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து :
சமீப காலமாக சினிமாவில் தொடர்ந்து விவாகரத்து தொடர்பான செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதில் ஒரு ஜோடிதான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்கள் இருவரும் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
விவாகரத்திற்குப் பிறகுத் தனது மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் இருவரும் இணைந்த நிற்கும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையான பெற்றோர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான தனுஷின் இன்ஸ்டாகிராம் பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.