மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க! | TV9 Tamil News

மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!

Updated On: 

29 Apr 2026 16:16 PM

 IST

Kalaignar Magaliri Urimai Thogai Scheme | திராவிட முன்னேற்ற கழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். தற்போது திமுக அரசு முடிவடைந்துள்ள நிலையில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மகளிருக்கு ரூ.1,000 மாத உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது திமுக அரசின் ஆட்சி காலம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான முதல்வரை தேர்வு செய்யும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மே 04, 2026 அன்று வெளியாகும். 

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் மகளிருக்கு ரூ.1,000 மாத உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது திமுக அரசின் ஆட்சி காலம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான முதல்வரை தேர்வு செய்யும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மே 04, 2026 அன்று வெளியாகும். 

2 / 5

சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாகி புதிய அரசு பதவி ஏற்க சில நாட்கள் தேவைப்படும். இந்த நிலையில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து மகளிர் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த நிலையில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து பார்க்கலாம். 

3 / 5

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அரசு மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் அதனுடன் சேர்த்து ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000-த்தை மகளிர் வங்கி கணக்கில் வரவு வைத்தது. அரசு வரவு வைத்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்காக மகளிர் உரிமைத் தொகை முடிவடைந்த நிலையில், மே மாதத்திற்கான உரிமைத் தொகை குறித்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

4 / 5

தமிழகத்தில் மே,06 2026 அன்று வரை தேர்தல் விதிகள் அமலில் இருக்கும். இதன் காரணமாக அதற்குள் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நிலையில், மே இரண்டாவது வாரத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

5 / 5

மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் மற்றொரு சிக்கல் உள்ளது. அதாவது தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழக அரசு ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மகளிர் உரிமைத் தொகை எந்த வித தடையும் இன்றி வழங்கப்படும். இல்லை என்றால் புதிய அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து தீர்மானம் செய்யப்படும். 

Follow Us