அக். 26 அன்று நடைபெறும் ஆசியான் உச்சிமாநாடு.. ரத்தாகிறதா பிரதமர் மோடியின் மலேசியா பயணம்?

PM Modi Visit To Malaysia: அக்டோபர் 26, 2025 அன்று தொடங்கும் ஆசியான் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது .

அக். 26 அன்று நடைபெறும் ஆசியான் உச்சிமாநாடு.. ரத்தாகிறதா பிரதமர் மோடியின் மலேசியா பயணம்?

கோப்பு புகைப்படம்

Published: 

23 Oct 2025 08:34 AM

 IST

டெல்லி, அக்டோபர் 23, 2025: மலேசியாவின் கோலாலம்பூரில் அக்டோபர் 26, 2025 அன்று தொடங்கும் ஆசியான் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டிற்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியான் (ASEAN) எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் உச்சி மாநாடு அக்டோபர் 26 முதல் அக்டோபர் 28, 2025 வரை — அதாவது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாடு தொடர்பான விவாதங்களில் இந்தியாவின் பங்கேற்பு நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

காணொளி காட்சி மூலம் பங்கேற்க திட்டம்?

ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது . கடந்த சில ஆண்டுகளில் ஆசியான் – இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் இந்திய பிரதிநிதிகளை பிரதமர் வழிநடத்தியுள்ளார். மலேசியா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசியானின் உரையாடல் கூட்டாளிகளான பல நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளது .

அதிபர் டிரம்ப் 2025 அக்டோபர் 26 அன்று கோலாலம்பூருக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தர உள்ளார். வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இருப்பினும், உடனடி முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: நீதியை நிலைநாட்டிய ஆபரேஷன் சிந்தூர்.. நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..

ஆசியான் உச்சிமாநாடு:

ஆசியான் – இந்தியா உரையாடல் உறவுகள் 1992 இல் ஒரு துறைசார் கூட்டாண்மையை நிறுவியதன் மூலம் தொடங்கியது. இது டிசம்பர் 1995 இல் முழு உரையாடல் கூட்டாண்மையாகவும், 2002 இல் உச்சிமாநாடு அளவிலான கூட்டாண்மையாகவும் மாறியது. இந்த உறவுகள் 2012 இல் ஒரு மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டன. ஆசியானின் 10 உறுப்பு நாடுகள் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா.

மேலும் படிக்க: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி.. எச்1பி விசா குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா!

அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன?

கடந்த சில ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி இந்தியாவிற்கும் ஆசியானுக்கும் இடையிலான இருவழி உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகின்றன. ஆரம்ப திட்டத்தின்படி, பிரதமர் மோடி மலேசியாவுடன் கம்போடியாவிற்கும் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் மலேசியாவிற்கு பயணம் செய்யாததால், திட்டமிடப்பட்ட கம்போடியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.