உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் ஓடும் ரப்தி ஆற்றில் கடுமையான நீர்மட்டம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் முழு நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றுப்படுகைகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.