கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு.. கோவையில் சோகம்
Coimbatore Elephant Dies : கோவை மாவட்டத்தில் கிணற்றில் ஆண் காட்டு யானை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தனியார் தோட்டத்திற்குள் அதிகாலை 3 மணியளவில் புகுந்த 10 வயது ஆண் காட்டு யானை, கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பொக்லைன் மூலம் மீட்டனர்.
கோயம்புத்தூர், ஜூலை 31 : கோவை காருண்யா நகர் அருகே 25 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் காட்டு யானை விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தனியார் தோட்டத்திற்குள் அதிகாலை 3 மணியளவில் புகுந்த 10 வயது ஆண் காட்டு யானை, கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பொக்லைன் மூலம் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Published on: Jul 31, 2025 02:37 PM