Viral Video : என்ன ஒரு ஐடியா.. டீயை வித்தியாசமான முறையில் வடிகட்டும் நபர்!

Strange Filter For Filtering Tea : இந்திய கூலித் தொழிலாளி, தேநீரை வடிகட்ட தேநீர் வடிகட்டி இல்லாமல், புற்களைப் பயன்படுத்திய வித்தியாசமான முறை இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது புத்திசாலித்தனமான செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சாதாரணமான பொருட்களைப் பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியர்களின் புதுமையான சிந்தனை இதில் வெளிப்படுகிறது.

Viral Video : என்ன ஒரு ஐடியா.. டீயை வித்தியாசமான முறையில் வடிகட்டும் நபர்!

வைரல் வீடியோ

Updated On: 

30 May 2025 20:09 PM

இந்தியா (India)  மட்டுமல்ல பல நாடுகளில் தேநீர் (Tea) அருந்துவது மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. காபி ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் டீ குடிப்பதற்கு அதிகம் விரும்புவார்கள். அந்த விதத்தில் தேநீரில் பல வகைகள் இருக்கிறது. இஞ்சி, ஏலக்காய் மற்றும் மசாலா டீ எனப் பல வகைகள் இருக்கிறது. அந்த விதத்தில் வட இந்தியாவை சேர்ந்த கூலித் தொழிலாளி (Laborer) ஒருவர், டீயை சாதாரணமாக வடிகட்டியை கொண்டு வடிகட்டாமல், வித்தியாசமான முறையில் புற்களைக் கொண்டு வடிகட்டும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கூலித் தொழிலாளி, தனது கையில் வைத்திருக்கும் காய்ந்த புற்களைக் (Dried Grasses) கொண்டு சூடாக இருக்கும் தேநீரை வடிகட்டுகிறார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெய்ண்டாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய மக்களுக்கு மூளை மிகவும் அதிகம் என்று கருத்துக்களை வெளியாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வைரல் வீடியோவில் அவர் செய்யும் விஷயத்தை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த வீடியோ :

வீடியோவில் நபர் ஒருவர் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். சாதாரணமாக அனைவரும் செய்வதுபோல செய்வது போல, பால், சர்க்கரை மற்றும் தேயிலை இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அவரும் டீ தயாரித்தார். ஆனால், தயாரிக்கப்பட்ட தேநீரை வடிகட்டி குடிக்க அவரிடம் தேநீர் வடிகட்டி இல்லை. அதன் காரணமாக அவர் ஒரு யோசனை ஒன்றைக் கண்டுபிடித்தார்.

அவர் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள உலர்ந்த புற்களைச் சேகரித்தார். பின் அந்த நபர் அவைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, வடிகட்டி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் அந்த டீயை வடிகட்டினார். இந்த விஷயத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். மேலும் இணையத்தில் வைரலாக இந்த வீடியோவை @chaigaliyara என்ற எக்ஸ் பயனர் வெளியிட்டுள்ளார். மேலும் லட்சம் பார்வைகளைப் பெற்ற இந்த பதிவின் கீழ், பலரும் தங்களின் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதில் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர், “இந்த நபருக்குப் புத்திசாலித்தனம் அதிகம்தான், ஒரு டீயை எப்படி வடிகட்டியுள்ளார்” என்று கூறினார். இரண்டாவது பயனர் ஒருவர் “இந்த நபருக்கு மட்டும் எப்படி இவ்வாறு ஐடியா வந்தது, எனக்குப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.