திருவள்ளுவர்: கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தை பலி…
Water Crisis Leads to Tragedy: திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் குடிநீர் பற்றாக்குறையால் அனுமதியின்றி தோண்டப்பட்ட கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை, விஷவாயு தாக்கி உயிரிழந்தார். மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தை பலி
திருவள்ளூர் ஜூன் 07: திருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur Crime) மப்பேடு அருகே அனுமதியின்றி தோண்டிய கிணற்றில் (Well) விழுந்த மகனை காப்பாற்ற தந்தை ஜோதி (Father Jothi) கிணற்றில் குதித்தார். விஷவாயு தாக்கியதால் அவர் உயிரிழந்தார். மகன் சந்தோஷ்குமார் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டியிருந்தது. போலீசும், தீயணைப்பு துறையும் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு (Mappedu police register a case) செய்து விசாரித்து வருகின்றனர்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த மகன்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே முதுகூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 61) என்பவர், தனது மகன் சந்தோஷ் குமாருடன் சேர்ந்து குடிநீர் குறைபாட்டை சமாளிக்க வீட்டின் பின்புறம் அனுமதியின்றி சுமார் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டி நீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த 2025 ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில், தண்ணீர் வராமல் இருந்ததால் சந்தோஷ்குமார் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி விழுந்தார்.
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை விஷவாயு தாக்கி உயிரிழப்பு
மகனை காப்பாற்ற ஜோதி உடனே கிணற்றுக்குள் இறங்கினார். ஆனால் உள்ளே தேங்கியிருந்த விஷவாயு தாக்கியதால் அவர் மயங்கி உயிரிழந்தார். அதற்கிடையில், சந்தோஷ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் புவனேஸ்வரி அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அப்போது அக்கம் பக்கத்து வீட்டு இளைஞர் பாலாஜி கயிறு உதவியுடன் சந்தோஷ்குமாரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தை உடலை மீட்ட காவல், தீயணைப்பு துறை
மப்பேட்டில் குடிநீர் பற்றாக்குறையால் அனுமதியின்றி தோண்டப்பட்ட கிணற்றில் விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை ஜோதி, விஷவாயு தாக்கி உயிரிழந்தார். மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி கிணறு தோண்டியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஜோதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தந்தையின் மரணம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குடிநீர் பற்றாக்குறை காரணமாக அனுமதியின்றி கிணறு தோண்டியிருப்பது குறித்து வட்டாட்சியர் ரஜினிகாந்த் நேரில் ஆய்வு செய்துள்ளார். இதுதொடர்பாக மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.