இனி சிக்கன், மட்டன் ஒரே விலை.. தமிழக அரசு முடிவு.. விரைவில் இணையதளம் துவக்கம்!

Tamil Nadu Meat Price : தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆடு, கோழி இறைச்சி விலையை அரசே நிர்ணயம் செய்யும் என கால்நடை பராமரிப்புத்துறை செயலர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில், புதிய போர்டல் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனி சிக்கன், மட்டன் ஒரே விலை.. தமிழக அரசு முடிவு.. விரைவில் இணையதளம் துவக்கம்!

இறைச்சி கடைகள்

Updated On: 

26 Jun 2025 21:12 PM

சென்னை, ஜூன் 26 : தமிழகம் முழுவதும் இனி ஆடு, கோழி இறைச்சிகளின் விலையை (Tamil Nadu Meat Price) அரசே நிர்ணயிக்கும் (Tamil Nadu Goverment) என கால்நடை செயலர் சுபையன் தெரிவித்துள்ளார். தினமும் விலையை அறிவிக்கும் வகையில், புதிய போர்டல் ஒன்றும் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், வரும் நாட்களில் இறைச்சி விலைகள் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்கள் வந்து விட்டாலே அனைவரின் நினைவுக்கு வருவது இறைச்சி தான். சிக்கன், மட்டன், மீன் என வார இறுதி நாட்களில் வாங்க மக்கள் வாங்குகின்றனர். ஆனால், இவற்றின் விலை என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சென்னையில் ஒரு விளைக்கு இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டால், மற்ற மாவட்டங்களில் இறைச்சிகள் விலையில் மாற்றம் இருக்கும். ஒரே மாதிரியான விலையில் எங்கும் விற்பனை செய்யப்படுவதில்லை.

இனி ஒரே விலையில் சிக்கன், மட்டன் விற்பனை

அந்தந்த வியாபாரிகள் அவர்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கால்நடை செயலர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழகம் முழுவதுதும் ஒரே விலையில் ஆடு, கோழி இறைச்சிகளை விற்பனை செய்ய விலையை அரசே நிர்ணயம் செய்யும் என அவர் அறிவித்துள்ளார்.

2025 ஜூன் 26ஆம் தேதி சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை செயல் சுப்பையன் கலந்து கொண்டார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

கால்நடை செயலர் அறிவிப்பு

அதன்படி, இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆடு, கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படும். இந்த இறைச்சி விலைகளை அரே நிர்ணயம் செய்யும். தினமும் ஆடு, கோழி இறைச்சி விலையை தினமும் நிர்ணயம் செய்யும் வகையில், இதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதளம் மூலம் இறைச்சி விலைகளை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இதன் மூலம், பண்டிகை நாட்களில் ஆடு, கோழி இறைச்சிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என அவர் கூறினார். ஏற்கனவே, தமிழகத்தில் முட்டை மற்றும் பிராய்லர் கோழி விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இனி வரும் நாட்களிலும் ஆடு, கோழி இறைச்சி விலைகளையும் அரசு நிர்ணயம் செய்யப்பட உள்ளது.  இதன் மூலம், பண்டிகை காலங்கள், திருவிழா போன்ற நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க பெரிதும் உதவும். இந்த அறிவிப்பு பேசும் பொருளாக மாறியதை அடுத்து, இறைச்சியின் விலையை அரசு நிர்ணயம் செய்ய முடியாது என கால்நடைத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்