ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யும் உத்தரவு ரத்து.. சிறுவன் கடத்தல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் ஆணை!

ADGP Jayaram Case : ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளது. அதோடு, ஏடிஜிபி பணியிடை நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்தால் அதில் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யும் உத்தரவு ரத்து.. சிறுவன் கடத்தல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் ஆணை!

ஏடிஜிபி ஜெயராம் வழக்கு

Updated On: 

19 Jun 2025 14:19 PM

சென்னை, ஜூன் 19 : ஏடிஜிபி ஜெயராமை (ADGP Jayaram Case) கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் (Madras High Court) உத்தரவை உச்ச நீதிமன்றம் (Supreme Court) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு, சிறுவன் கடத்தல் (Minor Abduction Case) வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் தன்னுடைய கைது உத்தரவை ரத்து செய்யவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் உடந்தையாக இருந்ததாக கூறி, 2025 ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடன் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

ஏடிஜிபி ஜெயராம் வழக்கு

இதற்கிடையில், தனது கைது உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பணியிடை நீக்கத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றம் ஜெயராம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

2025 ஜூன் 18ஆம் தேதி இந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ஜெயராமை பணியிடை நீக்கம் செய்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கும்போது எப்படி சஸ்பெண்ட் செய்தீர்கள் என நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தது.

மேலும், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனை அடுத்து வழக்கை 2025 ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு


அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் மீண்டும் 2025 ஜூன 19ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் பதில்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஜெராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து  செய்ய உத்தரவிட்டுள்ளது.  மேலும், மாநிலத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் டேவ், சிபிசிஐடி விசாரணையை எதிர்க்கவில்லை. ஏடிஜிபியின் பணியிடை நீக்கம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக இல்லை என்று கூறியது.

ஜெயராமுக்கு எதிரான குற்றவியல் வழக்கில் விசாரணை நிலுவையில் உள்ளதால் அதுவரை பணியிடை நீக்கம் தொடரும் என்று தெரிவித்தார். இதனை அடுத்த, உச்ச நீதிமன்றம் சிறுமி கடத்தல்  சிபிசிஐடிக்கு மாற்றவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஏடிஜிபி பணியிடை நீக்கம் செய்ய மாநில அரசு முடிவு செய்தால் அதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.