ஆன்லைன் விளையாட்டுகள் மீதான கட்டுப்பாடுகள் செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Madras High Court on Online Game : ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நேர கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு விதிகளை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் செல்லும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான கட்டுப்பாடுகள் செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம்

Updated On: 

03 Jun 2025 12:03 PM

சென்னை, ஜூன் 03 : ஆன்லைன் விளையாட்டுகளுக்கான (Online game) நேர கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு விதிகளை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் (Madras High court) தள்ளுபடி செய்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட விதிகளை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதனை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் விளையாடும் நேரம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. இதன் மூலம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் செல்லும்.

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்த்த வழக்கு

ஆன்லைன் விளையாட்டிற்கு  வரை அடிமையாகியும், பணத்தை இழந்தும் பலரும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த 2025ஆம் ஆண்டு தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

இதில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆதாரை கட்டாயமாக்கியும், நேர கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை 2025 பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் தமிழக அரசு அறிவித்தது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை செய்து அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.

மேலும், விளையாட்டுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கியம் அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இந்த வழக்கு குறித்து பல கட்ட விசாரணைகள் நடந்த  நிலையில், 2025 ஜூன் 3ஆம் தேதியான இன்று  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  அதன்படி,  ஆன்லைன் விளையாட்டுகள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்த்து தொரப்பட்ட வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்ற விசாரணையின்போது, ஆதாரை கட்டாயமாக்கியும், நேர கட்டுப்பாடு விதித்தும் விதிகளை வகுக்க அரசுக்கு அதிகாரமில்லை என்று ஆன்லைன் நிறுவனங்கள் சார்ப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை மறுத்த நீதிபதிகள் விளையாடும் நேரம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது.

மேலும், மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும்  வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.