தொன்மத்துக்கு ஒரு நீதி தொன்மைக்கு ஒரு நீதியா? கீழடி விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து காட்டம்
Keezhadi Issue: கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம் தொன்மத்துக்கு ஒரு நீதி, தொன்மைக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கீழடி விவகாரத்தில் வைரமுத்து கருத்து: கீழடியில் (Keezhadi) பல ஆண்டுகளாக அகழாய்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் (Amarnath Ramakrishnan) ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் அதனை ஏற்கக் கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றி விடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறி இருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த கருத்திருக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். போதிய ஆதாரங்கள் இருந்தும் அதனை அங்கீகரிக்க மத்திய அரசு மறுப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த கருத்திற்கு மதிய அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து காட்டம்:
ஒன்றிய அமைச்சர்
ஷெகாவத் அவர்கள்
கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க
இன்னும் அறிவியல் தரவுகள்
தேவையென்று சொல்லித்
தமிழர் பெருமைகளைத்
தள்ளி வைக்கிறார்ஒரு தமிழ்க் குடிமகனாக
அமைச்சர் அவர்களுக்கு
எங்கள் அறிவின் வலியைப்
புலப்படுத்துகிறேன்கீழடியின் தொன்மைக்கான
கரிமச் சோதனைகள்
இந்தியச்… pic.twitter.com/Vmmguv2jdx— வைரமுத்து (@Vairamuthu) June 12, 2025
இந்த விஷயம் சர்ச்சையாகி வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தொன்மை வேறு தொன்மம் வேறு ராமருக்கான தொன்மம் ஏற்றுக்கொண்ட நீங்கள்,தொன்மையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பான பதிவில், “ ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அவர்கள் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார். ஒரு தமிழ்க் குடிமகனாக அமைச்சர் அவர்களுக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன். கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச் சோதனைச் சாலையில் முடிவு செய்யப்பட்டவை அல்ல; அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் நடுநிலையான சோதனைச் சாலையில் சோதித்து முடிவறியப்பட்டவை அதனினும் சிறந்த அறிவியல் தரவு என்று அமைச்சர் எதனைக் கருதுகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ” ராமர் என்பது ஒரு தொன்மம் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை கீழடியின் தொன்மை என்பதற்கு அறிவியலே அடிப்படை ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தொன்மத்துக்கு ஒரு நீதி தொன்மைக்கு ஒரு நீதியா?” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்:
மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதில் கூறிய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதலில் கீழாடையை அவர்கள் ஒன்றுமே இல்லை என குறிப்பிட்டார்கள் பின்னர் கீழடியில் இருக்கும் ஆய்வ அதிகாரியை இடம் மாற்றினார்கள் அதனை தொடர்ந்து அதற்கான நிதி ஒதுக்க மாட்டோம் என குறிப்பிட்டார்கள் கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டார்கள் இப்போது ஆதாரம் போதவில்லை என்கிறார்கள் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது மத்திய அரசின் வேலையாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.