Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தை இன்று இலவசமாக சுற்றி பார்க்கலாம்.. தொல்லியல்துறை

Mamallapuram Free Entry: ஜூன் 21, சர்வதேச யோகா தினத்தையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இலவசமாகப் பார்வையிட இது ஒரு அரிய வாய்ப்பு.

சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தை இன்று இலவசமாக சுற்றி பார்க்கலாம்.. தொல்லியல்துறை
மாமல்லபுரம் Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 21 Jun 2025 09:34 AM

செங்கல்பட்டு ஜூன் 21: சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ந் தேதியை (International Yoga Day on June 21) முன்னிட்டு மாமல்லபுரத்தில் (Mamallapuram) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நாளில், கடற்கரை கோவில் மற்றும் ஐந்து ரதம் உள்ளிட்ட முக்கியமான புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இந்த சின்னங்கள் அனைத்தும் தொல்லியல்துறையின் (Archaeology) கட்டுப்பாட்டில் உள்ளன. யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்த இலவச அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தில் இலவச சுற்றுலா அனுமதி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், மத்திய அரசு தொல்லியல்துறை முக்கிய நடவடிக்கையெடுத்துள்ளது. இந்த ஆண்டின் யோகா தினத்தையொட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பல்லாயிரம் ஆண்டுகளின் பாரம்பரியம் கொண்ட புராதன நினைவுச்சின்னங்களை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச யோகா தினம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் மாமல்லபுரம்

மாமல்லபுரம் என்பது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் திகழ்கிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சின்னங்கள் வழக்கமாக கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

தொல்லியல்துறை அறிவிப்பு

ஆனால், யோகா தினத்தை முன்னிட்டு, 2025 ஜூன் 21 அன்று மட்டும் இவைகள் இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் யோகாவின் முக்கியத்துவத்தையும் இந்திய பாரம்பரியத்தையும் ஒருசேர அனுபவிக்கும்வாய்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும்.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் (International Day of Yoga) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் ஒரு சிறப்பான நாள் ஆகும். யோகாவின் உடல், மன நலன்கள் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை உலகளவில் வலியுறுத்தும் நோக்குடன் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த யோகா தினத்தை உருவாக்கும் முன்முயற்சி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்மொழியப்பட்டது. இதனை 177 நாடுகள் ஆதரித்து, ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. ஜூன் 21 என்பது வெயிலின் நீண்ட நாள் (Summer Solstice) என்றும், ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.