Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ திட்டம்.. ஏப்ரல் மாத இறுதியில் 2 ஆம் கட்ட சோதனை!

Poonamallee-Porur Line Test Run Update | சென்னை பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று மார்ச் 20, 2025 அன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ திட்டம்.. ஏப்ரல் மாத இறுதியில் 2 ஆம் கட்ட சோதனை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 19 Apr 2025 10:23 AM

சென்னை, ஏப்ரல் 19 : பூந்தமல்லி (Poonamallee) – போரூர் (Porur) வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தில் ஏப்ரல் 2025 இறுதிக்குள் 2 ஆம் கட்ட சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2025-ல் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சோதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணிகள் சீராக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 2025-க்குள் மெட்ரோ சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட சோதனை குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பூந்தமல்லி மெட்ரோ பணிகள்

சென்னையில் ஏற்கனவே சில பகுதிகளில் மெட்ரோ சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் சுமார் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சென்னையின் முக்கிய பகுதிகளான கலங்கரை விளக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பவர் ஹவுஸ் உள்ளிட்ட வழித்தடங்கில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மூன்று வழித்தடங்களில் பூந்தமல்லி வழித்தடம் மிகவும் முக்கியமானதாக கருதபப்டுகிறது. ஏராளமான பொதுமக்கள் பூந்தமல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்யும் நிலையில், அலுவலக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை மிகவும் எளிதாக மாற்றும் என கருதப்படுகிறது.

போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் பொறியியல் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 2025-க்குள் அது பொதுமக்கள் பயனபாட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, பூந்தமல்லி மெட்ரோ சேவை பொதுமக்கள் பயப்பாட்டிற்கு வர இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. முன்னதாக மெட்ரோ முதல் சோதனை ஓட்டம் மார்ச் 2025-ல் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சோதனை ஓட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்தி நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனை

இரண்டாம் கட்ட சோதனை குறித்து வெளியான அறிவிப்பு

சென்னை பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் முல்லை தோட்டம் வரையிலான சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையில் மார்ச் 20, 2025 அன்று முதற்கட்ட சோதனை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து ஏப்ரல் 2025 இறுதிக்குள் இரண்டாவது கட்ட சோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!...
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!...
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!...
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?...
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!...
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!...
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!...
தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. வெப்பநிலை குறையும் என அறிவிப்பு..
தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. வெப்பநிலை குறையும் என அறிவிப்பு.....
பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.. திருமணத்திற்கு முன் நடந்த சோகம்!
பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.. திருமணத்திற்கு முன் நடந்த சோகம்!...
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?...
தேமுதிகவில் இருந்து விலகும் நல்லதம்பி? கடிதத்தில் சொன்னது என்ன?
தேமுதிகவில் இருந்து விலகும் நல்லதம்பி? கடிதத்தில் சொன்னது என்ன?...