Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் மழை எதிரொலி.. நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

School Leave: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று ஜூன்16,2025, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

தொடர் மழை எதிரொலி.. நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Jun 2025 07:41 AM

பள்ளி விடுமுறை, ஜூன் 16,2025: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்கு இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு  ஜூன் 16 2025 தேதியான இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 16 2025) ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16 2025) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் நீலகிரி மாவட்ட ஆட்சியர். தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலில் நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மழை பதிவாகி வருகிறது இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கனமழை:

ஜூன் 16 2025 தேதியான இன்று நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் டச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு ஜூன் 18 2025 ஆம் தேதி வரை மிக கனமழை பதிவாகும் என்பதால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பதிவாகும் தொடர் மழை:


நீலகிரி மாவட்டத்தில் பதிவாகி வரும் தொடர் கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளமும் புகுந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, பார்சன் வேலி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பதிவாகி வருகிறது

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட பகுதியில் பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய கூடலூர், பந்தலூர், குந்தா, தாலுகா பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதே போல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிகளுக்கு இன்று (16/6/2025) ஒரு நாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் மருதாணி மரம் வளர்க்கலாமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ்!
வீட்டில் மருதாணி மரம் வளர்க்கலாமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ்!...
குடும்பத்தினருடன் குத்தாட்டம் ஏ.ஆர்.முருகதாஸ் - வைரலாகும் வீடியோ
குடும்பத்தினருடன் குத்தாட்டம் ஏ.ஆர்.முருகதாஸ் - வைரலாகும் வீடியோ...
மாணவர்களின் வீடு தேடிச்சென்ற கலெக்டர்.. குவியும் பாராட்டு..!
மாணவர்களின் வீடு தேடிச்சென்ற கலெக்டர்.. குவியும் பாராட்டு..!...
விராட் கோலி இதனால் பேசவில்லை.. சண்டை குறித்து ஏபிடி விளக்கம்!
விராட் கோலி இதனால் பேசவில்லை.. சண்டை குறித்து ஏபிடி விளக்கம்!...
அரைவேக்காட்டு தனமாக அரசியல் செய்யும் பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின்
அரைவேக்காட்டு தனமாக அரசியல் செய்யும் பழனிசாமி - முதல்வர் ஸ்டாலின்...
சென்னையில் பிரம்மாண்டமாக வருகிறது வொண்டர்லா தீம் பார்க்...
சென்னையில் பிரம்மாண்டமாக வருகிறது வொண்டர்லா தீம் பார்க்......
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!...
மதுரை மேலூர் ஸ்டைல் சிக்கன் ஃப்ரை.. செய்வது எப்படி?
மதுரை மேலூர் ஸ்டைல் சிக்கன் ஃப்ரை.. செய்வது எப்படி?...
திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? .. இதெல்லாம் கவனம்!
திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? .. இதெல்லாம் கவனம்!...
முதியவர்களை குறிவைக்கும் டிஜிட்டல் கைது மோசடி கும்பல்..
முதியவர்களை குறிவைக்கும் டிஜிட்டல் கைது மோசடி கும்பல்.....
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்!
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்!...