Priyanka Chopra: பல கட்டுப்பாடுகள்.. ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் இதுதான் – பிரியங்கா சோப்ரா! | TV9 Tamil News

Priyanka Chopra: பல கட்டுப்பாடுகள்.. ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் இதுதான் – பிரியங்கா சோப்ரா!

Updated On: 

22 Feb 2026 17:16 PM

 IST

Priyanka Chopra Interview: பான் இந்திய பிரபல கதாநாயகியாக கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய படங்களில் நடிப்பதை விடவும், ஹாலிவுட் திரைப்படங்களில் ஆக்ஷன் கதாநாயகியாக கலக்கிவருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், இந்திய சினிமாவை விட்டு ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

1 / 5இந்திய ஹாலிவுட் கதாநாயகியாக படங்களில் ஆக்ஷன் வேடத்தில் நடித்துவருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகியாக இருக்கிறார். இவர் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது முழுமையாக ஹாலிவுட் திரைப்படங்களில் ஆக்ஷன் கதாநாயகியாக கலக்கிவருகிறார். இவர் தற்போது இந்திய சினிமாவிலும் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார்.

இந்திய ஹாலிவுட் கதாநாயகியாக படங்களில் ஆக்ஷன் வேடத்தில் நடித்துவருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் கதாநாயகியாக இருக்கிறார். இவர் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது முழுமையாக ஹாலிவுட் திரைப்படங்களில் ஆக்ஷன் கதாநாயகியாக கலக்கிவருகிறார். இவர் தற்போது இந்திய சினிமாவிலும் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார்.

2 / 5

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டில் நடந்த மிஸ் வேர்ல்ட் டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த வகையில் இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் தமிழன். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

3 / 5

இப்படத்தை தொடர்ந்து இந்தியில் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். பிளான், கிஸ்மத், பிளாக்மெயில், கரண், கிரிஷ், டான் போன்ற படங்களில் உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரம்மாண்ட கதாநாயகியாக வளர்ந்தார். தொடர்ந்து இந்தி படங்கள் இவருக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கவே ஹாலிவுட்டில் கேர்ள் ரைசிங் என்ற ஹாலிவுட் படத்தில் முதல் முறையாக நடித்திருந்தார். இதையடுத்து இவருக்கு ஹாலிவுட் திரைப்படங்களில் தொடர் வாய்ப்புகள் கிடைத்தது.

4 / 5

மேலும் தற்போதுவரையிலும் இவர் ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிவருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் தற்போது தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக வாரணாசி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

5 / 5

நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி சினிமாவை விட்டு, நான் விலக நினைத்தது இல்லை. ஆனால் சில காரணங்களால், பல கட்டுப்பாடுகள் என்மீது விதிக்கப்படுவதை நான் உணர்ந்தேன். இதேவேளை என் நிலையிலிருந்து, இன்னும் வளரவேண்டும் நான் எண்ணினேன். அதனால் ஹாலிவுட் சினிமாவிற்கு சென்றேன். என்னதான் இருந்தாலும், இந்திய சினிமாவின் மீதான எனது பாசமும், நேசமும் போகாது. பாலிவுட் சினிமாவா?, ஹாலிவுட் சினிமாவா? எது பெரியது என்ற எல்லைக்கு நான் செல்வதற்கு விரும்பவில்லை என அதில் தெரிவித்துள்ளார்.