கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன? | TV9 Tamil News

கேஸ் சிலிண்டர் முன்பதிவில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?

Updated On: 

02 May 2026 14:11 PM

 IST

Gas Cylinder Booking Rules Changed | மேற்கு ஆசிய போர் காரணமாக கேஸ் சிலிணர் சிக்கலை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது குறித்த முக்கிய மாற்றங்கள் மே 01, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன.

1 / 5கள்ளச் சந்தையில் கேஸ் விற்பனையை தடுக்கும் வகையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

கள்ளச் சந்தையில் கேஸ் விற்பனையை தடுக்கும் வகையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், என்ன என்ன மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5

மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து பொதுமக்களுக்கும் எந்தவித தடையுமின்றி கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

3 / 5

கேஸ் சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, முன்னதாக ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 21 நாட்கள் இடைவெளி இருந்த நிலையில், இந்த கால இடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நரபுறங்களில் 21 நாட்களுக்கு பதிலாக 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களுக்கு 45 நாட்களாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

4 / 5

அதுமட்டுமன்றி, சிலிண்டர் விநியோகத்தின் போது ஓடிபி முறை 100 சதவீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு கேஸ் சிலிண்டர் பெற ரசீதை காட்டினால் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை டெலிவரி ஊழியரிடம் பகிர்ந்தால் மட்டுமே இனி சிலிண்டர் வழங்கப்படும். 

5 / 5

கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும், அனைவருக்கும் தடையின்றி கேஸ் சிலிண்டர் கிடைப்பதற்கு இந்த விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் மே 01, 2026 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us