அட கொடுமையே… கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. மருமகள் எடுத்த முடிவு.. நடந்தது என்ன?
Bihar Dowry Incident : பீகாரில் வரதட்சணையாக பைக், பணம், நகைகள் தர முடியாததால் தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாக பெண் தீப்தி என்பவர் புகார் அளித்துள்ளார். தீப்தியின் கணவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்ததால் மாமியார் இவ்வாறு கேட்டிருக்கிறார். இதனை அடுத்து, கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார், ஜூன் 11 : பீகாரில் வரதட்சணையாக (bihar dowry incident) மாமியார் தன்னிடம் கிட்னி (kidney) கேட்பதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை கிளப்பியது. இந்த வினோத சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. வரதட்சணை கேட்பதே குற்றம். ஆனாலும், இன்றைய நவீன காலத்திலும் வரதட்சணை என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக, மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகை, ரொக்கம், பைக், கார் என பெண் வீட்டார் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்து வருகின்றனர். அதோடு, தங்களுக்கு அப்பார்மெண்ட், டிவி, கட்டில் போன்றவையும் மணமகன் வீட்டார் கேட்பது இன்று தொடர்கிறது.
கிட்னியை வரதட்சணையாக கேட்ட மாமியார்
இப்படி நகை, பணம் என வரதட்சணையாக கேட்டு இந்த காலத்தில், மாமியார் ஒருவர் மருமகளிடம் கிட்ணியை வரதட்சணையாக கேட்டிருக்கிறது. இது வேறு எங்கும் நடக்கவில்லை. நம் இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீப்தி. இவர் முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனக்கு 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், அதன் பிறகு முசாபர்பூரில் உள்ள போச்சாஹா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள மாமியார் வீட்டிற்கு குடிபெயர்ந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்ததாகவும், அதன்பிறகு மாமியார் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறினார்.
தன்னுடைய வீட்டில் கார், பைக், பணத்தை ரொக்கமாக கேட்டதாக அந்த பெண் கூறினார். மேலும், தங்களது வீட்டில் பணம் இல்லாததால், மாமியார் கேட்டதை தர மறுத்துள்ளார் பெண் தீப்தி. இதனால், மாமியார் பெண் தீப்தியிடம் கிட்னி ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார்.
மருமகள் எடுத்த முடிவு
தனது நோய்வாய்ப்பட்ட மகனுக்கு தானம் செய்ய கிட்னியை கேட்டுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தீப்தி கூறுகையில், “எனது கணவரின் சிறுநீரகக் கோளாறு குறித்து எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. இருப்பினும் அவர் திருமணத்திற்கு முன்பே சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார்” என்று கூறினார்.
கிட்னி தர மறுத்த பெண் தீப்தியை அவரது மாமியார் தாக்கி வீட்டை வெளியே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த பெண் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து, கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முசாபர்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணையாக மருமகளிடம் கிட்னி கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.