Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலியிடம் இனி வீணாகாது.. பயணிகள் நலனுக்காக ரெயில்வே புதிய நடைமுறை

Railway Waitlist Upgrade:இந்திய ரயில்வே, காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு புதிய வசதியை அறிவித்துள்ளது. இனி, AC 3-Tier, AC 2-Tier மற்றும் First AC வகுப்புகளில் காலியிடங்கள் இருந்தால், கீழ் வகுப்பில் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் இன்றி இடம் வழங்கப்படும். இதுவரை AC 3-Tier வரை மட்டுமே இவ்வசதி இருந்தது. இந்த புதிய அறிவிப்பு பகல் ரயில்களுக்கும் பொருந்தும்.

காலியிடம் இனி வீணாகாது.. பயணிகள் நலனுக்காக ரெயில்வே புதிய நடைமுறை
பயணிகள் நலனுக்காக ரெயில்வே புதிய நடைமுறை Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 18 May 2025 07:20 AM

சென்னை மே 18: மத்திய ரெயில்வே வாரியம் (Central Railway Board) காத்திருப்போர் பட்டியலில் (Railway Waiting List) உள்ள பயணிகளுக்கு இட ஒதுக்கீடு செய்யும் நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. தற்போது, கீழ் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு, மேல் வகுப்புகளான AC 3-tier, AC 2-tier மற்றும் First AC வகுப்புகளில் காலியிடம் இருந்தால், கூடுதல் கட்டணம் இன்றி இடம் வழங்கப்படும். இதுவரை இந்த வசதி AC 3-tier வரை மட்டுமே இருந்தது. இப்போது அது மேல் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்நடைமுறை பகல் நேர ரெயில்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மேன்மை தரும் இந்த நடவடிக்கையால் இடங்கள் பயன்பாடாகவும் பயண அனுபவம் மேம்படவும் செய்யும்.

ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் புதிய நடைமுறை

மத்திய ரெயில்வே வாரியம், ரெயில்களில் பயணிகளுக்காக காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் இடங்களை ஒதுக்கும் நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த 2006 முதல் நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், சாதாரண பெட்டியில் (2ம் வகுப்பு) முன்பதிவு செய்தும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு, 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் (AC 3-tier) காலியிடங்கள் இருந்தால் கூடுதல் கட்டணம் இன்றி அவை வழங்கப்பட்டு வந்தன.

விரிவாக்கப்பட்ட வசதிகள்

இப்போது இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, 2ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் (AC 2-tier) மற்றும் 1ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளிலும் (First AC) காலியிடங்கள் இருந்தால், கீழ் வகுப்பில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் இன்றி அவை வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, 3ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக்கு, 2ம் வகுப்பு அல்லது 1ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தால், நேரடியாக அந்த இடம் ஒதுக்கப்படும்.

பகல் ரெயில்களுக்கும் விரிவாக்கம்

இத்துடன், இந்நடைமுறை இரவு ரெயில்களுக்கு மட்டுமல்லாது, பகல் நேரத்தில் இயக்கப்படும் ரெயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலனை முன்னிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், அதிக பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல்

ரெயில்களில் “காத்திருப்போர் பட்டியல்” (Waiting List) என்பது, ஒரு குறிப்பிட்ட ரெயில் பயணத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுப்போன பிறகு, பயணிகளுக்கு வழங்கப்படும் இடைநிலை முன்பதிவு தரமாகும். இதைப் பொதுவாக இந்திய ரெயில்வே “WL” என குறிக்கிறது.

முக்கியமான வகைகள்

WL (Waiting List) – சாதாரண காத்திருப்பு.

GNWL (General Waiting List) – பொதுவான காத்திருப்பு, பெரும்பாலான பயணங்களுக்கு இது தான் வழங்கப்படும்.

RLWL (Remote Location WL) – இடைநிலையிலிருந்து தொடங்கும் பயணங்களுக்கு.

PQWL (Pooled Quota WL) – ஒரே ரெயிலில் பல இடங்களுக்கான ஒருங்கிணைந்த குவோட்டா.

RAC (Reservation Against Cancellation) – இட ஒதுக்கீடு இல்லை, ஆனால் பயண அனுமதி உண்டு; இருவரும் ஒரு சீட்டை பகிர்ந்துகொள்வார்கள்.

சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு...
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?
மாம்பழத்தோல் சாப்பிடலாமா? நன்மை, தீமை என்னென்ன?...
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!
தளபதி விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த சூரி!...
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா
'சூர்யா45' படத்தில் நடிக்க இதுவே காரணம்- ஸ்வாசிகா...
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!
சர்க்கரை அளவை குறைத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை – CBSE அறிவுரை!...
புதன் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!
புதன் பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!...
சார்மினாரில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு
சார்மினாரில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு...
பிளே ஆஃப் கனவில் GT.. தடுத்து நிறுத்துமா DC..? மழைக்கு வாய்ப்பா?
பிளே ஆஃப் கனவில் GT.. தடுத்து நிறுத்துமா DC..? மழைக்கு வாய்ப்பா?...
'ஏஸ்' பட விழாவில் இயக்குநரை புகழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!
'ஏஸ்' பட விழாவில் இயக்குநரை புகழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!...
தொடர்கிறது போர் நிறுத்தம்... உறுதி செய்த இந்திய ராணுவம்!
தொடர்கிறது போர் நிறுத்தம்... உறுதி செய்த இந்திய ராணுவம்!...
ஈரோட்டில் இரட்டை கொலை: 3 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை
ஈரோட்டில் இரட்டை கொலை: 3 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை...