Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bay of Bengal : வங்கக்கடலில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் அளவாக பதிவு!

Minor 4.5 Magnitude Earthquake Strikes Bay of Bengal | கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனபடி, இன்று (மே 19, 2025) அதிகாலை வங்கக்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Bay of Bengal : வங்கக்கடலில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் அளவாக பதிவு!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 19 May 2025 07:55 AM

சென்னை, மே 19 : வங்கக்கடலில் (Bay of Bengal) இன்று (மே 19, 2025) அதிகாலை திடீர் நிலலடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 12.45 மணி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 4.5 ரிக்டர் அளவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது . இந்த நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டுள்ளதால் அது எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழும் நில நடுக்கங்கள்

உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மியான்மரில் ஏற்பட்ட சக்தியாந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மியான்மரை தொடர்ந்து அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட மேலும் சில பகுதிகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகாலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இந்த நிலையில், இன்று (மே 19, 2025) அதிகாலை வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேசிய நில அதிர்வு மையம், இன்று அதிகாலை 12.45 மணி அளவில் வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதாவது, வங்கக்கடலில் சுமார் 55 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தின் அளவு 4.5 ரிக்டராக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விலைவுகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!...
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!...
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!...
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?...
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!...
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக..
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக.....
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?...
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!...
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!...
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தில் இருந்து வெளியான புது அப்டேட்!
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்தில் இருந்து வெளியான புது அப்டேட்!...