திருமாவளவனின் கூட்டணி தொடர்பான கருத்துக்கள்.. அதிருப்தியில் திமுக?
VCK Leader Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விசிகவின் கூட்டணி கட்சியான திமுகவினர் இடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீப காலங்களாக நிகழ்ச்சிகளில் கருத்து தெரிவித்து வருவது திமுகவினர் இடையே அதிருப்தி ஏற்ப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கும் முன்பு வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூட்டணி, தேர்தல், தொகுதி பங்கீடு என்பதெல்லாம் வேறு கட்சியின் கொள்கை என்பது வேறு. தேர்தலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை கொள்கையில் உறுதியாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். 2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு இதையெல்லாம்விட முக்கியம் தேசம் தான் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
சீட்டுகளை பேரம் பேசும் கட்சி விசிக கிடையாது:
இது ஒரு பக்கம் இருக்க ஜூன் 24 2025 தேதியான நேற்று முன்தினம் சென்னையில் விசிகவின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதிலும் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது, “ நாடாளுமன்ற, சட்டமன்ற சீட்டுகளை பேரம் பேசும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி கிடையாது. நாற்காலியில் எ எனக்கு நம்பிக்கை இல்லை பிளாஸ்டிக் சேர், தரையில் கூட நான் அமருவேன். தேர்தலில் போட்டியில்லை எனக் கூட நான் அறிவித்து விடுவேன்” என பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் 25 2025 தேதியான நேற்று மீண்டும் இதே கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.
சனாதன சக்திகளா விசிகவா?
— VCK IT WING (@vckitwingoffi) June 26, 2025
இது தொடர்பாக பேசிய அவர் தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடக்கும் போது தான், எத்தனை தொகுதிகள்? இடங்கள்? என்பதை தீர்மானிக்க முடியும். இயக்கத் தோழர்களை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தும் வகையில் மேடைகளில் பேசுவதையும், பேச்சுவார்த்தை நடத்துவதையும் முடிச்சு போட்டு பார்க்க வேண்டிய தேவை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதிக இடங்களை கேட்கும் விசிக:
இது ஒரு பக்கம் இருக்க 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக வீசிகாவின் வன்னி அரசு தனியார் தொலைக்காட்சியிடம் பேசுகையில், “ கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஆறு தொகுதிகள் மட்டுமே பெற்றதில் வீசிகாவினருக்கு வருத்தம். எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக தலைவர் திருமாவளவனுடன் வலியுறுத்தி உள்ளோம். எங்களுக்கு 50 தொகுதிகளில் கூட போட்டியிட விருப்பம் தான்” என தெரிவித்துள்ளார்.
அதிருப்தியில் திமுக?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மேடைகளிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி கட்சியான திமுகவினர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய விடும் என பல சம்பவங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கட்சி தலைவர் திருமாவளவன் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்றும் திமுக கூட்டணியில் தான் தொடரப்போவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஆனால் கூடுதல் இடங்கள் கேட்பதாலும் இது போன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவதன் காரணமாகவும் திமுக கூட்டணி அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டுள்ளது.