Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

615 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எப்போது அப்ளை பண்ணலாம்?

TNPSC Combined Technical Service : உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 48 பதவிகளுக்கான 615 காலிப் பணியிடஙகளை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு 2025 மே 27ஆம் தேதி தொடங்கி ஜூன் 25ஆம் தேதி முடிவடைகிறது.

615 பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. எப்போது அப்ளை பண்ணலாம்?
டிஎன்பிஎஸ்சிImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 May 2025 07:35 AM

சென்னை, மே 22 : உதவிப் பொறியாளர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு தேர்வு (TNPSC Combines Service technical Job) நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கு 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2025 மே 27ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி (TNPSC Recruitment 2025) நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வு நடத்தப்பட்டு, அதற்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப பணிகளுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

விஏஓ முதல் துணை ஆட்சியர் வரை பல்வேறு காலிப் பணியிடங்கள் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை, வேளாண் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 615 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு 2025 மே 27ஆம் தேதி இதற்காக விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2025 மே 27ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தேர்வுகள் 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் சில நாட்களில் தொடங்க உள்ளது. தேர்வர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை யுபிஐ செயலி மூலம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

முன்னதாக, குரூப் 4 தேர்வுக்கு இன்னும் சில நாட்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 3,935 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 மே 24ஆம் தேதியாகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 2025 மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.  இதற்கான விண்ணப்பம் இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. எனவே, தேர்வர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள். மேலும், அதற்கான கட்டணத்தை செலுத்தி கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை டூ குமரி.. 10 நாட்களுக்கு மிக கனமழை.. வெதர்மேன் அலர்ட்!
கோவை டூ குமரி.. 10 நாட்களுக்கு மிக கனமழை.. வெதர்மேன் அலர்ட்!...
நடிகர் விக்ரமின் 63-வது படத்திற்கு நாயகி யார்?
நடிகர் விக்ரமின் 63-வது படத்திற்கு நாயகி யார்?...
பொருளாதார ரேஸில் முந்தும் இந்தியா, சீனா.. திணறும் அமெரிக்கா!
பொருளாதார ரேஸில் முந்தும் இந்தியா, சீனா.. திணறும் அமெரிக்கா!...
ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்!
ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்!...
சீனாவில் அதிர்ச்சி: தத்தெடுத்த நாய்களை கொன்று சமைத்த பெண்..!
சீனாவில் அதிர்ச்சி: தத்தெடுத்த நாய்களை கொன்று சமைத்த பெண்..!...
சென்னை: சுவர் கட்ட பள்ளம் தோண்டும்போது கிடைத்த வெடிகுண்டு...
சென்னை: சுவர் கட்ட பள்ளம் தோண்டும்போது கிடைத்த வெடிகுண்டு......
+2 சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி... மாணவி எடுத்த விபரீத முடிவு
+2 சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி... மாணவி எடுத்த விபரீத முடிவு...
அமலாக்கத்துறை வளையத்தில் சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ்?
அமலாக்கத்துறை வளையத்தில் சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ்?...
முதலிடத்தை தக்கவைக்க களமிறங்கும் GT! ஆறுதல் வெற்றிபெறுமா LSG?
முதலிடத்தை தக்கவைக்க களமிறங்கும் GT! ஆறுதல் வெற்றிபெறுமா LSG?...
பல மொழி வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்!
பல மொழி வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்!...
103 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
103 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!...