Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்.. சம்பவ இடத்திலேயே பலியான கணவன் – மனைவி!

Tirupur Ambulance Crash Kills Couple | திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முருகன் என்பரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஆம்புலன்சில் பயணித்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்.. சம்பவ இடத்திலேயே பலியான கணவன் – மனைவி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 11 Apr 2025 08:45 AM

திருப்பூர், ஏப்ரல் 11 : திருப்பூரில் (Tirupur) சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகியதில் (Ambulance Ran Over Lorry) இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த முருகன், கல்யாணி தம்பதி உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த கொடூர விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது, காயமடைந்தவர்களில் நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருப்பூரில் அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேந்த முருகன் என்பவரை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மருத்துவமனை நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் முருகனின் மனைவி கல்யாணி உள்ளிட்ட மூன்று பேரும் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், ஆம்புலன்சில் பயணம் செய்த முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் முருகன், கல்யாணி தம்பதியுடன் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த முருகன் – கல்யாணி தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியை சேர்ந்தவர் இன்பராஜ். இவருக்கு  வயது 19. இவருக்கு செவக்காலப்பட்டியை சேர்ந்த பூவரசன் என்ற நண்பர் இருந்துள்ளார். அவருக்கு வயது 19. இவர்கள் இருவரும் குளித்தலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 10, 2025) இருவரும் மணப்பாறை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி ஒன்று மாணவர்களின் இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!
சித்ரா பௌர்ணமி.. 4 இடங்களில் விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்!...
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்..
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஐபிஎல்லில் தர்மசாலா போட்டி இடமாற்றம்.....
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை
1 கிலோ தங்கம், ஒரு பெட்ரோல் பங்க் - ரூ.21 கோடிக்கு வரதட்சணை...
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா..
பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்.. திருப்பி கொடுத்த இந்தியா.....
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்...
சிறுநீரில் வெள்ளை நுரை: காரணங்களும் சிகிச்சை முறைகளும்......
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!...
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!...
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு...
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!...