சென்னையில் மின்சார பேருந்து சேவை.. எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு
Chennai Electric Buses : சென்னையில் மின்சார பேருந்துகள் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025 ஜூன் 30ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக 5 பணிமனைகளில் இருந்து 120 மின்சார பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மின்சார பேருந்துகள்
சென்னை, ஜூன் 26 : சென்னையில் மின்சார பேருந்துகள் (Chennai Electric Buses) சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) 2025 ஜூன் 30ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக 5 பணிமனைகளில் இருந்து 120 மின்சார பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் மின்சார பேருந்துகளை இயக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், முதற்கட்டமாக தலைநகர் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, மாநகர போக்குவரத்து கழகம் மூலம் 625 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார பேருந்து சேவை எப்போது?
இதற்கான பணிகளும் ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது மின்சார பேருந்துகள் தயாரிக்கும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. தற்போது, மின்சார பேருந்துகள் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் மின்சார பேருந்து சேவை முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூன் 30ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னயில் இருந்து ஐந்து பேருந்து பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தொண்டியார்பேட்டை ஆகிய பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதாவது, சென்னை சென்ட்ரல் பேருந்து பணிமனையில் இருந்து 145 பேருந்தும், பூந்தமல்லி பணிமனையத்தில் இருந்து 125 பேருந்துகளும், வியாசர்பாடியில் 120 பேருந்துகளும், பெரும்பாக்ககத்தில் 120 பேருந்துகளும், தொண்டியார்பேட்டையில் 100 பேருந்துகளும் என மொத்தம் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக ஐந்து பணிமனைகளில் இருந்து 120 மின்சார பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ஐந்து பேருந்து பணிமனைகளில் அதற்காக சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக வியாசர்பாடி பணிமனையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களால் விரைவில் புதியதாக இயக்கப்பட உள்ள மின்சாரப் பேருந்துகளுக்கான விழா முன்னேற்பாடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது.
உடன் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்… pic.twitter.com/Yn4fTX0PJi— Sivasankar SS (@sivasankar1ss) June 26, 2025
சென்னை வியாசர்பாடியில் இருந்து இயக்கப்பட உள்ள மின்சார பேருந்துகளையும், மின்சார பேருந்துகளுக்கான விழா முன்னேற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 2025 ஜூன் 26ஆம் தேதியான இன்று ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.