புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்.. இதில் இவ்வளவு சிறப்புகளா? விரைவில் திறப்பு!
Chennai Valluvar Kottam : சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2025 ஜூன் 21ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். ரூ.80 கோடி மதிப்பில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம்
சென்னை, ஜூன் 17 : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் (Chennai Valluvar Kottam) புனரமைக்கப்பட்ட நிலையில், 2025 ஜூன் 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு வசதிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மக்கள் தொகை அதிகமாக தமிழக அரசு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. தலைவர் சென்னையில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களையும், வசதிகளையும் மேற்கொண்டு வருகிறது. நவீன முறையில் தலைநகர் சென்னையை மாற்ற புதிய முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்
குறிப்பாக, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களை புனரமைத்து வருகிறது. அதில் ஒன்று வள்ளுவர் கோட்டம். சென்னை அடைளாங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத்தை தமிழக அரசு புனரமைத்துள்ளது. சென்னை நுங்கம்பாகத்தில் வள்ளுர் கோட்டம் அமைந்துள்ளது.
வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், 10 ஆண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்திருந்தது. இந்த நிலையில், வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கப்படும் என 2023ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
அதன்படியே, தற்போது ரூ.80 கோடி மதிப்பில் வள்ளுர் கோட்டம் புனரமைக்கப்பட்டது. இந்து செய்தி தகவலின்படி, கடந்த ஓராண்டாக இந்த பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது முடிந்துள்ளது. இதனை அடுத்து, புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை 2025 ஜூன் 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதில் இவ்வளவு சிறப்புகளா?
வள்ளுவர் கேட்டம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் நுழைவு வாயிலின் தூண்கள், முகப்பில் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரையப்பட்டுள்ளது.
மேலும், நுழைவாயிலில் மின் விளக்குகளுடன் இசை நிரூற்று அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, தரை தளத்தில் 1,500 பேர் அமரக்கூடிய வகையில், ஏசி ஆடிட்டோரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 100 பேர் ஒரே நேரத்தில் இருக்கக் கூடிய நூலகம், ஆராய்ச்சி மண்டபமும் அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் 150 வாகனங்கள் பார்க் செய்யும் வசதிகளும் உள்ளன. முதல் தளத்தில் உள்ள குரல் மணிமடத்தில் 1,330 திறக்குறளும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் விளக்கவுரை மற்றும் தொடர்புடைய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 106 அடி உயரமுள்ள தேருக்குச் செல்லும் மாடியில் அலங்காரத் தூண்கள் மற்றும் மூடப்பட்ட பாதையுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சிறந்த அணுகலுக்காக லிஃப்ட் மற்றும் சாய்வுதளங்களும் நிறுவப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.