வறண்ட வானிலையே இருக்கும்.. மழைக்கான வாய்ப்பு இல்லை.. வானிலை சொல்வது என்ன?

Tamilnadu Weather Update: சென்னையில் ஜூன் மாத தொடக்கத்தில் தினசரி நகரின் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பதிவானது. ஆனால் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஜூன் 18 2025 தேதியான நேற்று 38.8 டிகிரி செல்சியஸ் சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது.

வறண்ட வானிலையே இருக்கும்.. மழைக்கான வாய்ப்பு இல்லை.. வானிலை சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

19 Jun 2025 17:39 PM

வானிலை நிலவரம், 19 ஜூன் 2026: கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் ஒரு சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மழையின் வீரியம் என்பது குறைந்துள்ளது அதோடு மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூன் 19 2025 மற்றும் ஜூன் 2025 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை ஜூன் 25 2025 வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை என்பது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் மற்றும் மதுரையில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பதிவாகியுள்ளது

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?


சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை ஜூன் 19 2025 தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் மாத தொடக்கத்தில் தினசரி நகரின் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பதிவானது. ஆனால் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஜூன் 18 2025 தேதியான நேற்று 38.8 டிகிரி செல்சியஸ் சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் மற்றும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் காரணமாக மதியமேற்கு வங்கக்கடல், வடமேற்கு வங்க கடல், தென்மேற்கு வங்க கடல், மத்தியமேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.