தமிழகத்தில் குறையும் மழை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

Weather Update Tamil Nadu: தமிழகத்தில் ஜூன் 19, 2025 தேதியான இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறையும் மழை.. அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Jun 2025 06:41 AM

வானிலை நிலவரம், ஜூன் 19,2025: தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக நகரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மற்றும் அதனை ஒட்டுக பகுதிகளின் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூன் 18 2025 அன்று மத்திய ராஜஸ்தான் பகுதியில் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை என்பது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழையானது மே மாதம் தொடங்கியது.

தென்மேற்கு பருவ மழை:

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து இந்தியாவில் இருக்கக்கூடிய அநேக மாநிலங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அதேசமயம் ஜார்க்கண்ட் அருகே உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் குறையும் மழை:

தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் 19 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஜூன் 24 2025 ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் கன மழை பதிவான நிலையில் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்துள்ளது அதேசமயம் வெயிலின் தாக்கமும் சற்று அதிகரித்து உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் என்பது இயல்பை விடை அதிகரித்து காணப்படுகிறது. ஜூன் 19 2025 தேதியான இன்று வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் ஜூன் 19 225 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38. 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக்கடல் மற்றும் அரபி கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக வடக்கு ஆந்திரா, தென்மேற்கு வங்க கடல், மத்திய அரபிக்கடல், அதனை ஒட்டி தென்மேற்கு அரபிக்கடல், வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்