மற்ற மதமும் முக்கியம் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்..
Annamalai: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பள்ளிகளுக்கு மாணவர்கள் திருநீறு, ருத்ராக்ஷம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அதே சமயம் மற்ற மதங்களும் முக்கியம் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அண்ணாமலை
பள்ளிகளில் ருத்ராட்சம் அணிந்தும் திருநீரை வைத்தும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என அண்ணாமலை பேசி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு என் குழந்தை சிறுநீரை வைத்து செல்லாது என்றால் நாம் எந்த காலத்தில் இந்து தர்மத்தில் வாழ்கிறோம். ஒரு பெண் குழந்தை பள்ளிக்கு பொட்டு வைத்து செல்ல முடியவில்லை என்றால் அந்தப் பெண் குழந்தை நாளை எப்படி சனாதர தர்மத்தை காப்பாற்றும் என பேசியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தரப்பில் பள்ளிகளில் சாதி ரீதியான மோதல்கள் ஏற்படாமல் மாணவர்களுக்கிடையே ஏற்படாமல் இருக்க நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் குறியீடுகள் அணிந்து வரக்கூடாது, ஆசிரியர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாணவர்களை சாதிய பெயர் வைத்து அழைக்கக்கூடாது, வண்ண மணிக்கட்டு பட்டைகளை அணியக்கூடாது, மாணவர்கள் வரும் வாகனங்களில் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கக் கூடாது என பல்வேறு நெறிமுறைகள் வழங்கியுள்ளது.
அண்ணமலையின் கருத்து:
தமிழக அரசு தரப்பில் இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில் அண்ணாமலை அதற்கு நேர்மாறாக கருத்துக்களை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளிகளில் மாணவர்கள் திருநீறு மற்றும் ருத்ராட்சத்தை அணிந்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதே போல் பிற மதங்களும் முக்கியம் என்பதை எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பள்ளிக்கூடங்களில் ருத்ராட்சம் அணியாதே திருநீறு குங்குமம் அணியாதே என சொல்லிக் கொடுப்பது மதர் சார்பின்மை கிடையாது. நம்முடைய மதத்தை அடையாளப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. இதனை தமிழக அரசு உணர வேண்டும். அதே சமயம் பிற மதமும் முக்கியம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியான பாகுபாடு ஏற்படாமல் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க அரசு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கும் நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையில் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பாபிஷேக விழாவில் அண்ணாமலை:
இன்று மாலை, கன்னியாகுமரி மாவட்டத்தில், 200 ஆண்டுகள் பழமையான, வைகுண்டபுரம் ஸ்ரீராமர் திருக்கோவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு நடைபெற்ற, நூதன ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விழாவில், @BJP4Tamilnadu மாநிலத்… pic.twitter.com/9sGMD3ngoK
— K.Annamalai (@annamalai_k) June 27, 2025
இது போன்ற சம்பவங்கள் பள்ளிகளில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இது போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 200 ஆண்டுகள் பழமையான, வைகுண்டபுரம் ஸ்ரீராமர் திருக்கோவில் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்டு பேசுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.