பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்.. | TV9 Tamil News

பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்..

Published: 

13 Jan 2026 15:27 PM

 IST

பொங்கல் பண்டிகை ஒட்டி இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு காரில் சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க ஓஎம்ஆர், வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

1 / 6பொங்கல் பண்டிகை ஒட்டி இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

பொங்கல் பண்டிகை ஒட்டி இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

2 / 6

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தமாக 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து மட்டும் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

3 / 6

சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

4 / 6

பொங்கல் முடிந்த சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்தவகையில், ஜன.16 முதல் 19ம் தேதி வரை மொத்தமாக 25,008 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

5 / 6

பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 4.88 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

6 / 6

பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.என போக்குவரத்து துறை அமைச்சார் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Follow Us