மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்! | TV9 Tamil News

மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்!

Updated On: 

09 May 2026 00:43 AM

 IST

Petrol and Diesel Price | மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மே 15, 2026-க்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 / 5இந்தியாவில் மே 15, 2026-க்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் ரூ.30,000 கோடி வரை ஒரு மாதத்தில் இழப்பை சந்திக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளதால் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் மே 15, 2026-க்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் ரூ.30,000 கோடி வரை ஒரு மாதத்தில் இழப்பை சந்திக்க நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளதால் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

2 / 5

பிப்ரவரி மாத தொடக்கத்தில் உருவான மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை இரண்டு மடங்கு உயர்வு கடும் உச்சத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதன் காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான எண்ணெய் தட்டுப்பாடை எதிர்க்கொண்டு வருகின்றன. 

3 / 5

இவ்வாறு கச்சா எண்ணெய்  தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய சிக்கல்கள் நிலவும் நிலையில் பல நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோ, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து வருகிறது. 

4 / 5

ஹோர்முஸ் நீரிணை சிக்கல் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

5 / 5

அதாவது 2026-ல் கச்சா எண்ணெய் 2025-ஐ விடவும் இரண்டு மடங்கு உயர்வை சந்தித்து புதிய உச்சத்தில் உள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.30,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us