எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்.. கைது செய்த பிஎஸ்எஃப் வீரர்கள்!!
Pahalgam Terror Attack : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, எல்லை பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், எல்லையை தாண்டிய பாகிஸ்தான் ராணுவ வீரரை, பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் எல்லை தாண்டியதாக இந்திய ராணுவ வீரர் பிடிப்பட்டநிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

எல்லை பகுதி
காஷ்மீர், மே 04 : ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரரின் விவரங்கள் வெளியாகவில்லை. பாகிஸ்தான் ராணுவ வீரரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) காவலில் எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளமான பஹல்காமில் (Pahalgam attack) சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் இந்தியா உட்பட உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந் லஷ்கர் இ தொய்வா அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. அதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை தொடர்ந்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக தக்க பதிலடி கொடுப்போம் என இந்தியா உறுதி அளித்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்கு இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், இருநாடுகளும் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இரண்டு நாடுகளுக்கு தங்களது ராணுவ பலத்தை சோதனையிட்டு வருகின்றனர். முதலில் இந்தியா தனது போர் விமானங்களை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. உத்தர பிரதேச மாநிலம் கங்கா விரைச்சாலையில் பல்வேறு விமானங்களை இறக்கி சோதனை முயற்சியில் ஈடுபட்டது. இது பாகிஸ்தானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
கைது செய்த பிஎஸ்எஃப் வீரர்கள்
எனவே, 2025 மே 3ஆம் தேதியான நேற்று பாகிஸ்தான் ஏவுகணையை சோதனையிட்டு பார்த்தது. 420 கிலோ மீட்டர் தூரம் சென்றும் தாக்கும் தன்மை கொண்ட, ஏவுகணையை பாகிஸ்தான் சோதனையிட்டது. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இருநாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த வாரம் பாகிஸ்தானுக்குள் தற்செயலாக எல்லையைக் கடந்து சென்றதற்காக பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் கைது செய்தது.
அவர் பூர்ணம் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை விடுவிப்பது தொடர்பாக இந்தியா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் அவரை விடுவிக்கவில்லை. இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். அவரிடம் தற்போது விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.