Soori : இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!

Actor Sooris Explanation : தமிழ் சினிமாவில் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சூரி. இந்த படத்தைத் தொடர்ந்து வரும் படங்கள் எல்லாம் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மாமன். இந்த படத்தின் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூரி , இனிமேல் படங்களில் நகைச்சுவை ரோலில் நடிப்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.

Soori : இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!

நடிகர் சூரி

Published: 

11 May 2025 22:19 PM

நடிகர் சூரியின் (Soori)  நடிப்பில் இறுதியாக வெளியான படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்திருந்த நிலையில், அவருக்கு அடுத்த முக்கிய ரோலில் சூரி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj)  இயக்கத்தில் மாமன் (Maaman)  படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lakshmi)  நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து கடந்த 2025, மார்ச் மாதத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தினை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகர் விமலின் விலங்கு என்ற வெப் தொடரை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்துதான் இந்த மாமன் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூரி விடுதலை பார்ட் 1 படத்தை தொடர்ந்து, கருடன், விடுதலை 2 போன்ற படங்களை முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதில் இவரின் நடிப்பில் கருடன் படமானது எதிர்பாராத வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மாமன்.

இந்த படமானது வரும் 2025, மே 16 தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய சூரி இனிவரும் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பாரா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அவர் அதில், நான் முன் சொன்னது போலத்தான் படங்களில் இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

காமெடி நடிகராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சூரி கொடுத்த பதில் :

அந்த நிகழ்ச்சியில் சூரி எனக்கு யாருடனும் போட்டிகள் கிடையாது, நான் படங்களில் நடிப்பதில் ஒரு கட்டத்தைக் கடந்துவிட்டேன். இனிமேல் பழைய பாதையில் செல்வது மிகவும் கடினம். ஒருவேளை அவ்வாறு நடிக்கவேண்டுமானால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்பட்ட முக்கியத்துவம் இருக்கவேண்டும். என்னை மக்களிடையே நல்ல அழகாக எடுத்துச் செல்லவேண்டும். இனிமேல் என்னால் ஒரு படத்தில் பத்தோடு பதினொன்றாவது கதாபாத்திரமாக இருக்கமுடியாது.

இயக்குநர்கள் என்னைத் தேடிவந்து படத்தில் நடிக சொல்லுகிறார்களே என்றெல்லாம் படங்களில் காமெடியனாக நடிக்க முடியாது. அப்படி ஒரு வேலை நான் நடித்தால் என்னைக் கதாநாயகனாக வைத்துப் படத்தை இயக்கும் இயக்குநர்களிடம் நான் என்ன சொல்ல முடியும், அதன் காரணமாகவும் இனிமேல் கதையின் ஹீரோவாக நடிப்பதில் நான் முடிவாக இருக்கிறேன் என்று நடிகர் சூரி பரபரப்பாகப் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.