கொளுத்தும் வெயில்.. 6 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்.. எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் ?
TamilNadu Weather Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியசும் மீனம்பாக்கத்தில் 37.9 (100 டிகிரி ஃபாரன்ஹீட்) டிகிரி செல்சியசும் வெப்பநிலை பகுதி ஆகி உள்ளது.

கோப்பு புகைப்ப்டம்
வானிலை நிலவரம்: தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தென்மேற்கு பருவமழையின் காரணமாக அனேக மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மழைக்கான வாய்ப்பானது படிப்படியாக குறைந்து வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 38.3 டிகிரி செல்சியசும், பரங்கிப்பேட்டையில் 38.2 டிகிரி செல்சியசும், திருச்சியில் 38.1 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரித்து வரும் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியசும் மீனம்பாக்கத்தில் 37.9 (100 டிகிரி ஃபாரன்ஹீட்) டிகிரி செல்சியசும் வெப்பநிலை பகுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வெப்பநிலை என்பது 3.3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் குறையும் மழை:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 19, 2025
2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையானது முன்கூட்டியே மே மாதம் தொடங்கியது பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தது. வெயிலின் தாக்கத்தை கணிசமாக குறைத்து உஷ்ணத்தை தனித்தது. இந்த பருவமழையின் காரணமாக கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகப்படியான மழை பொழிவு பதிவானது அதேபோல் பிற மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவானது. ஆனால் தற்போது மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வெப்பநிலை என்பது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர், கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20, 2025 தேதி யான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை அடுத்த ஐந்து நாட்களுக்கு அதாவது ஜூன் 25 205 வரை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்