2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகம்.. கீழடியின் அறிவியல் சான்றுகள்..

Keezhadi: லண்டனில் இருக்கும் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் கீழடியில் கிடைத்த 2 மண்டை ஓடுகளை 3டி முறை பயன்படுத்தி 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகங்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் டி.என்.ஏ பகுப்பாய்வு மேற்கொண்டு கூடுதல் தரவுகள் பெற திட்டமிட்டுள்ளனர்.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் முகம்..  கீழடியின் அறிவியல் சான்றுகள்..

3டி முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகங்கள்

Published: 

29 Jun 2025 15:41 PM

கீழடி, ஜூன் 29, 2025: கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கீழடியில் கிடைத்த மண்டையோடுகளை வைத்து 2500 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர்களின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருக்கக்கூடிய ஆய்வகத்தில் 3d முறையில் தமிழர்களின் இரு முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொந்தகையில் கிடைத்த இரு மண்டையோடுகள் வைத்து நடத்திய ஆய்வு அடிப்படையில் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் அறிவியல் 20 சதவீதம் கலைப்பூர்வமாக முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக கீழடி தொடர்பான ஆய்வறிக்கை தமிழக அரசு மத்திய அரசிற்கு சமர்ப்பித்த பொழுது, இதற்கு போதிய தரவுகள் இல்லை என்றும் கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் கூறி அதனை வெளியிடாமல் இருந்தது.

3டி முறையில் வடிவமைக்கப்பட்ட முகங்கள்:

ஆனால் இதற்கு தமிழக அரசு தரப்பிலும் பல்வேறு தொல்லியல் துறை ஆய்வாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கீழடியில் கிடைத்த மண்டையோடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் இங்கிலாந்தில் இருக்கக்கூடிய ஆய்வகத்தில் 3d முறை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் இருக்கும் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த கண்டுபிடிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சரின் நெகிழ்ச்சி பதிவு:


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல் வழி நிறுவப்பட்ட சான்றாக கீழடியில் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் கொந்தகையில் இருக்கக்கூடிய ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரம் கூடியவர்களாக இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதே சமயம் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை. டிஎன்ஏ பகுப்பாய்வு நடத்தி இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா, அல்லது இதற்கு முன்பு எங்கிருந்தார்கள், எந்த பகுதியில் இருந்து வந்தார்கள் என பல்வேறு தகவல்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

கீழடியின் அறிவியல் சான்றுகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு:


அதேபோல தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பான பதிவில், “ கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என குறிப்பிட்டுள்ளார்

Related Stories
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் டெல்லி பயணம்.. தேர்தல் ஆணையத்தை அணுக திட்டம்..
எடப்பாடி பழனிசாமியுடன் புகைப்படம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த ஆர்டர்..
Tamil Nadu Assembly Elections 2026: திமுக கூட்டணியில் தொடர்வது ஏன்..? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம்!
பாமகவில் வலுக்கும் தந்தை மகன் மோதல்.. சமாதான பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு அழைப்பு விடுத்த எம்.எல்.ஏ அருள்..
ஓய்வு பெறும் அமைச்சர் துரைமுருகன்? திமுகவில் நிகழப்போகும் அதிரடி மாற்றங்கள்.. ப்ளான் என்ன?
Isha Foundation: வருடாந்திர பராமரிப்பு பணிகள்! ஜூலை 1ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை.. ஈஷா அறிவிப்பு..!