வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு எப்படி?

Tamil Nadu weather Today: வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஜூன் 18, 2025 தேதியான இன்று மேலும் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு எப்படி?

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Jun 2025 07:06 AM

வானிலை நிலவரம், 18 ஜூன் 2025: கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஜூன் 18 2025 அன்று மேலும் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 18 2025 தேதியான இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இன்று (ஜூன் 18 2025) மழைக்கான வாய்ப்பு என்பது குறைவாகவே உள்ளது.

குறைந்தது மழையின் தீவிரம்:

தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதலே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் முழுவதும் நல்ல மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்டு மாவட்டங்களிலும் மிக கனமழை பதிவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக நீலகிரி கோவை உள்ளிட மாவட்டங்களில் அதிக கன மழை மற்றும் மிக கனமழை பதிவான நிலையில் ஜூன் 18 2025 தேதியான இன்று கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகரியில் இருக்கும் அவலாஞ்சி, பார்சன் வேலி, மேல் பவானி கூடலூர், பந்தலூர். ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் மரம் முறிந்து மண் சரிவு ஏற்பட்டது. அதேபோல் நீலகிரியில் இருக்கக்கூடிய ஏழு சுற்றுலா தளங்களும் கனமழை காரணமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கனமழைக்கு மட்டுமே வாய்ப்பு – பிரதீப் ஜான்:


இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடுகையில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர் மலை பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.