Budget 2026 : 2026 மத்திய பட்ஜெட்.. விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்! | TV9 Tamil News

Budget 2026 : 2026 மத்திய பட்ஜெட்.. விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்!

Updated On: 

16 Jan 2026 12:56 PM

 IST

Farmers expectations of Union Budget 2026 | பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் சில எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 அன்று தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்புகளில் இருந்து பல எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 அன்று தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்புகளில் இருந்து பல எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.

2 / 5

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கான எதிர்ப்பார்ப்புகள் ஒருபுறம் இருக்க ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல செயல்படுத்தப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

3 / 5

கிசான் கிரெடிட் கார்டு வழியாக கிடைக்கும் கடன் திட்டத்தின் கீழ், கடன் வரம்பை உயர்த்துவது குறித்து அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிசான் கிரெடிட் கார்டுகள் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு குறுகிய கால கடன்களை எளிதாக்குகின்றன. 

4 / 5

திருத்தப்பட்ட வட்டி மானிய திட்டத்தின் கீழ், கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறும் கடன்களுக்கான வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறவில்லை.

5 / 5

இந்த நிலையில், வேளாண் அமைச்சகம் இது குறித்து முன்மொழிவை விரைவில் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் மீதான எதிர்ப்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.