Waziristan Attack : வசிரிஸ்தான் தாக்குதல்.. பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா!
India Rejects Pakistan's Accusation | நேற்று (ஜூன் 28, 2025) பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பிய வாகனம் ஒன்று தற்கொலை தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் இந்தியாவை குற்றம் சாட்டிய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது.

வசிரிஸ்தான் தாக்குதல்
புது டெல்லி, ஜூன் 29 : பாகிஸ்தானின் (Pakistan) வசிரிஸ்தான் (Waziristan) தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அதனை இந்திய வெறியுறவுத்துறை (Ministry of External Affairs of India) திட்டவட்டமாக மறுத்துள்ளது. வசிரிஸ்தான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னாள் இருப்பது இந்தியா தான் என பாகிஸ்தான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக இந்திய வெறியுறவுத்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வசிரிஸ்தான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்
ஜூன் 28, 2025 அன்று பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பிய வாகனம் ஒன்று தற்கொலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 13 ராணுவ வீர்ரகள் கொல்லப்பட்டனர். இந்த விபத்தில் மேலும் 10 ராணுவ வீரர்களும், பொதுமக்கள் 19 பேரும் காயமடைந்தனர். தெற்கு வசிரிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கையின் போது 11 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்ட ஒருசில நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்காமல் உள்ளது.
பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
Statement regarding Pakistan
🔗 : https://t.co/oQyfQiDYpr pic.twitter.com/cZkiqY1ePu
— Randhir Jaiswal (@MEAIndia) June 28, 2025
வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தற்கொலை தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜூன் 28, 2025 அன்று வசிரிஸ்தான் மீதான தாக்குதலுக்கு, இந்தியா மீது குற்றம் சாட்டி பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளதை நங்கள் பார்த்தோம். அவமரியாதையுடன் கூடிய இந்த கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 மாதங்களில் 290 பேர் பலி
2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக போராடும் ஆயுத குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் சுமார் 290 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக AFP-ன் தரவுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.