Vijay : கோட் பட ஷூட்டிங்கில் விஜய் சொன்ன காட்சி.. அவரே காலில் விழுந்தார்… – வெங்கட் பிரபு!

Venkat Prabhu : நடிகர் விஜய்யின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கோட். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் அதிரடி நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, கோட் படத்தில் ஒரு காட்சியில் விஜய் காலில் விழுந்துவிட்டார் என்று கூறியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Vijay : கோட் பட ஷூட்டிங்கில் விஜய் சொன்ன காட்சி.. அவரே காலில் விழுந்தார்... - வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு மற்றும் விஜய்

Published: 

01 Jun 2025 18:57 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தி கோட் (The GOAT) . தளபதி விஜய்யின் (Thalapathy Vijay)  68வது திரைப்படமாக வெளியானதுதான் இந்த கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி  (Sneha and Meenakshi Chowdhury) நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்திருந்தார். இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்த படமானது சுமார் ரூ. 425 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றி பேசிய வெங்கட் பிரபு, கோட் படத்தில் விஜய் (காந்தி), தனது மகன் ஜீவன் காலில் விழும் காட்சியை அவரே கூறினார் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசிய வீடியோ :

இயக்குநர் வெங்கட் பிரபு விஜயை பற்றிப் பேசிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, “கோட் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது, காந்தி (தந்தை விஜய் ), மகன் ஜீவனின் காலில் விழும் காட்சியை, விஜய் சார்தான் செய்தார். நான் அந்த காட்சியில் கையெடுத்து கும்பிடும்படிதான் கூறினேன், ஆனால் விஜய் சார்தான் காலில் விழுந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். மேலும் அதைப் போல நடு ரோட்டில் எனது காலில் விழுந்து, இவ்வாறு அந்த காட்சியில் செய்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டார்.

நானும் அந்த காட்சியில் காலில் விழுவது தவறாக மக்களுக்குச் சென்றுவிடக்கூடாது என  யோசித்தேன். பின் எனது உதவி இயக்குநர்களிடம் கேட்டேன் அவர்களும் நன்றாக இருக்கிறது என்று கூறினர். விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் சொன்ன ஐடியாதான் அது. அதுவும் படத்தில் நன்றாகத்தான் வந்திருந்தது. அந்த ஒரு காட்சியை எடுப்பதற்கு 2 நாள் ஆனது, ஏனென்றால் அது மிகவும் கூட்டமான இடம். முதல் நாள் விஜய் காந்தி கெட்டப்பில் நடித்தார், மறுநாள் மகன் ஜீவன் கெட்டப்பில் நடித்தார். அந்த ஒரு காட்சியை எடுத்தற்கே 2 நாட்கள் ஆனது” என்று இயக்குநர் வெங்கட் பிரபு பேசியிருந்தார்.