அப்படி என்ன பேசியிருப்பாங்க? அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே நடந்த வைரல் சம்பவம்..

G7 Summit: பிரஞ்சு அதிபர் இமேனுவல் மக்ரோன் மற்றும் இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே நடைபெற்ற ரகசிய தகவல் பரிமாற்றம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் தற்பொது வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்படி என்ன பேசியிருப்பாங்க? அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையே நடந்த வைரல் சம்பவம்..

பிரதமர் ஜார்ஜியா மெலோனி - பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன்

Updated On: 

18 Jun 2025 10:48 AM

ஜி7 உச்சி மாநாடு: ஜி7 உச்சி மாநாட்டின் (G7 Summit) போது நடந்த ஒரு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனையை (French President Emmanuel Macron) பார்த்து  பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Italian PM Georgia Meloni) கண் சிமிட்டியது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கனடாவில் ஜி 7 உச்சி மாநாடு சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் பிரதமர் என  உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலக நிகழ்வுகள் வர்த்தகம் போன்றவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது.

உச்சி மாநாட்டில் நடந்தது என்ன?

இந்த மாநாட்டின் போது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உலக தலைவர்கள் கனடாவின் ஆல்பர்டாவில் கூடியிருந்த போது பிரென்ச் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே இருக்கும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இரு தலைவர்களும் அருகில் அமர்ந்திருந்தனர்.

கண் ஜாடையில் அதிபர் மக்ரோனுக்கு பதிலளித்த பிரதமர் மெலோனி:


இந்த நிகழ்வு நடந்த பொழுது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் மெலோனியிடம் அதிபர் மக்ரோன் ஏதோ காதில் ரகசியமாக பேசினார். அதனை தொடர்ந்து மெலோனி சரி என தலை ஆட்டுவது போல் கட்டைவிரலை உயர்த்தி பதிலளித்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இருவருக்கும் இடையே என்ன கருத்து பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறித்து தற்போது வரை தெரியவில்லை. இரு தலைவர்களும் இந்த வைரல் காட்சிகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகளுக்கு சமூக பயனர்கள் பல்வேறு கருத்துகளை கமெண்ட்களாக பதிவு செய்து வருகின்றனர்.

அவசரமாக வெளியேறிய அதிபர் டிரம்ப்:

இது ஒரு பக்கம் இருக்க ஜி 7 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் அனைவரும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வரைவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை உடனடியாக தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதே சமயம் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக துணை நிற்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட மறுத்ததாகவும் ஜி7 உச்சி மாநாடு கூட்டத்திலிருந்து முன்கூட்டியே அவசரமாக புறப்பட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.