புதிய பொலிவுடன் புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..
TN CM MK Stalin: 80 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று ஜூன் 21, 2025 மாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். இதில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம்
சென்னை நுங்கம்பாக்கம் அருகே இருக்கக்கூடிய வள்ளுவர் கோட்டத்தில் (Valluvar Kottam) 80 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் 21 2025 தேதியான இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் (TN CM MK Stalin) அதனை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். வள்ளுவர் கோட்டம் என்பது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகும். இந்த திருவள்ளுவரை நினைவாக இது 1974 முதல் 1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கட்டமைக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து இருந்த வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பதற்காக தமிழக அரசால் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
புதிய வடிவில் வள்ளுவர் கோட்டம்:
புனரமைப்பு பணிகள் முழுமை அடைந்த நிலையில் ஜூன் 21 2025 தேதியான இன்று மாலை, பொது மக்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. புனரமைக்கப்பட்ட புதிய வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 20,000 சதுர அடி பரப்பளவில் 1548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான ஐயன் வள்ளுவர் கலையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகளுடன் புதிய அம்சங்கள்:
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் இன்று திறப்பு!@mkstalin | #ValluvarKottam pic.twitter.com/j3yx7gmzaC
— Vinodth Vj… (@VinodthVj) June 21, 2025
அதேபோல் கலைஞர் கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1330 திருக்குறளையும் கொண்ட குரல் பலகைகள் அமைக்கப்பட்டு, ஓவியங்களுடன் புதிய வடிவம் குரல் மணிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. 100 பேர் அமரும் வசதியுடன் திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் இலக்கிய விவாதங்கள் ஆவணப் பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சுக்கு பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதோடு 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 162 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3,3036 சதுர அடியில் வரக்கூடிய மக்கள் உணவருந்தும் வகையில் உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும் 24 பேர் அமரக்கூடிய வசதிகளையும் இந்த உணவகம் கொண்டுள்ளது.
முக்கியமாக திருவாரூர் தேர் வடுவில் 16 அடி உயரம் உடைய கல் தேரில் ஒளி, ஒளி நுட்பத்தில் வனவிலக்கம் அமைக்கப்பட்டுள்ளது அதோடு மியூசிக்கல் பவுண்டன் எனப்படும் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு முக்கிய தளமாக விளங்கக்கூடிய வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்டது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது