போதைப் பொருள் வழக்கு.. விசாரணை வளையத்தில் நடிகர் கிருஷ்ணா.. பின்னணி என்ன?

Drug Cases Actor Krishna : நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில் அடுத்தடுத்த பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் வழக்கு.. விசாரணை வளையத்தில் நடிகர் கிருஷ்ணா.. பின்னணி என்ன?

நடிகர் கிருஷ்ணா

Updated On: 

24 Jun 2025 08:01 AM

சென்னை, ஜூன் 24 : போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் (Actor Krishna) போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் (Drug Case) கைது செய்யப்பட்ட பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் அடுத்தடுத்த பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் கேகே சேகரின் 2வது மகன் கிருஷ்ணா. 2008ஆம் ஆண்டு அலிபாபா படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதைத் தொடர்ந்து, அவர் நடித்த கழுது படம் பெரும் வரவேற்பை பெற்றது.

விசாரணை வளையத்தில் நடிகர் கிருஷ்ணா

அதைத் தொடர்ந்து, கற்றது களவு, யாமிருக்க பயமேன், வல்லினம், யாக்கை, வானவராயன் வல்லவராயன் என சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2023ஆம் ஆண்டு ராயர் பரம்பரை படித்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து, தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  இப்படியான சூழலில், அவர் போதைப் பொருள் வழக்கில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் கைதை தொடர்ந்து, கிருஷ்ணாவும் போதைப் பொருள் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்த் வழக்கில் கைதான பிரதீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணா போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. சுமார் கிராமுக்கு ரூ.12000க்கு போதைப் பொருளை கிருஷ்ணா வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, விரைவில் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

விசாரணை நடத்தும் பட்சத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடுத்தடுத்து நடவடிக்கைகளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கேரளாவில் கிருஷ்ணா இருப்பதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்து 2025 ஜூன் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கொக்கைன் சப்பை செய்ததாக அதிமுக பிரமுகர் பிரசாத் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கயானை நாட்டைச் சேர்ந்த ஜான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து, ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என ஸ்ரீகாந்த் கூறினார்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிந்தது. இதனை அடுத்து, அவரை கைது செய்து 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இதில், கைதான கும்பலிடம் இருந்து 40 முறை கொக்கைனை ரூ.4.72 லட்சத்திற்கு வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, ஸ்ரீகாந்துக்கு 2025 ஜூலை 7ஆம்  தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.