காலையிலேயே பரபரப்பு.. அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்.. என்ன நடந்தது?

Arunachal Pradesh Earthquake : அருணாச்சல பிரதேசத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 மே 18ஆம் தேதியான இன்று அதிகாலை 5.06 மணிக்கு திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளது.

காலையிலேயே பரபரப்பு.. அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்.. என்ன நடந்தது?

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Updated On: 

18 May 2025 10:38 AM

அருணாச்சல பிரசேதம், மே 18 : அருணாச்சல பிரதேசத்தில் திடீரென நிலநடுக்கம் (Arunachal Pradesh Earthquake) ஏற்பட்டது பரபரப்பை கிளப்பி உள்ளது. 2025 மே 18ஆம் தேதியான இன்று அதிகாலை 5.06 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம், நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.  இதனால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஆண்டுதோறும்  ஏற்பட்டு வருகிறது. அதோடு,  சேதமும் அதிகளிவில் ஏற்பட்டு வருகிறது.  அண்மையில் கூட,  மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பூகம்பம் ஏற்பட்டது. இதில், இருநாடுகளிலும் பெரிய பெரிய கட்டிடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்தன.

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்

சுமார் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலக நாடுகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அவ்வப்போது பல்வேறு நாடுகளில் சிறிய அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், 2025 மே 18ஆம் தேதியான இன்று காலையிலேயே அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, அருணாச்சல பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3.8 ரிகடர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசாக குலுக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும், அங்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, துருக்கில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. குளுவிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ தொலைவில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பிப்ரவரி 2023ல், துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பேரழிவு தாக்கத்தால் துருக்கியில் 59,000 பேரும் சிரியாவில் 8,000 பேரும் உயிரிழந்தனர். இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.