Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காஞ்சிபுரத்தில் சோகம்: நாய் கடித்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

Dog Bites Student: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 வயது விஸ்வா, நாயால் கடிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பகுதியில் நாய் கடிப்பு சம்பவங்கள் அதிகரித்து, ராபீஸ் போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதற்கு முறையான கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

காஞ்சிபுரத்தில் சோகம்: நாய் கடித்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
நாய் கடித்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்புImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 12 Apr 2025 07:15 AM

காஞ்சிபுரம் ஏப்ரல் 12: காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram District) குன்றத்தூர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த சிவசங்கரின் மகன் விஸ்வா (13), 8-ம் வகுப்பு மாணவன், கடந்த 2025 ஏப்ரல் 7-ம் தேதி வீட்டின் அருகே விளையாடியபோது நாயால் கடிக்கப்பட்டார். விஸ்வாவுக்கு சிகிச்சை வழங்க பிறகு, 2025 ஏப்ரல் 9-ம் தேதி நேற்று முன்தினம் அவனுக்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனைக்கு (Private Hospital) எடுத்துச் சென்றதும், பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி விஸ்வா உயிரிழந்தார். ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு (Oragadam Police Register Case) செய்து விசாரணை மேற்கொள்கிறார்.

வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை கடித்த நாய்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்த சிவசங்கரின் 13 வயது மகன் விஸ்வா என்பவர், 8-ம் வகுப்பு மாணவர். கடந்த 2025 ஏப்ரல் 7-ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, விஸ்வாவை நாய் கடித்தது. இதனால் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.

வயிற்றுவலி மற்றும் தலைவலியால் அவதிப்பட்ட விஸ்வா

இதனைத் தொடர்ந்து, 2025 ஏப்ரல் 7-ம் தேதி இரவு 9 மணியளவில் விஸ்வாவுக்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவரை ஒரகடம் அருகிலுள்ள மாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை மேலும் சிறந்த சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவர்

ஆனால், மருத்துவர் குழுவின் முயற்சியும் பலிக்காமல், விஸ்வா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வாவின் மரணம் தொடர்பாக ஒரகடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் நாய் கடிப்பு சம்பவங்கள்

தமிழகத்தில் நாய் கடிப்பு சம்பவங்கள் தற்போது கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்துள்ளன. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பாதுகாப்பில்லாத நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராபீஸ் போன்ற தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு

பொதுவாக, புறநகர்வு, நகரத்துக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் இந்த சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நாய்கள் கடிக்கும் போது ராபீஸ் போன்ற தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் இருப்பதால், மருத்துவர்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

இதனைத் தடுக்க, நகராட்சிகள் மற்றும் கிராம நிர்வாகங்கள், நாய் கூட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாய்கள் மீது கண்காணிப்பு வைப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என சுகாதார தரப்பு கூறுகிறது.

குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!
குருபெயர்ச்சி 2025.. சென்னையில் செல்ல வேண்டிய குருபகவான் கோயில்!...
சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்..?
சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்..?...
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்கள் இதோ
நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்கள் இதோ...
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?...
3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி!
3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் கிரியேட்டர்களுக்கு ரூ.21,000 கோடி!...
மே 6-ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்!
மே 6-ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்!...
மாமன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகர் சூரி - கவனம் பெறும் பதிவு!
மாமன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகர் சூரி - கவனம் பெறும் பதிவு!...
சினிமா பாணி சேஸிங்.. திருத்தணி கோயிலில் நடந்த பரபரப்பு கல்யாணம்!
சினிமா பாணி சேஸிங்.. திருத்தணி கோயிலில் நடந்த பரபரப்பு கல்யாணம்!...
தியேட்டரில் ரெட்ரோ படத்தை பார்த்த நடிகை பூஜா ஹெக்டே...
தியேட்டரில் ரெட்ரோ படத்தை பார்த்த நடிகை பூஜா ஹெக்டே......
ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்!
ஆண்டுக்கு 8.1% வட்டி வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்!...
நாடு கடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு கடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!...