Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

வெடிக்கும் போர்? ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்… எல்லையில் பதற்றம்!

Pahalgam Terror Attack : போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. தரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கம் திறனை கொண்டுள்ளது. அண்மையில், இந்தியா போர் விமானங்களை சோதனையிட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

வெடிக்கும் போர்?  ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்…   எல்லையில் பதற்றம்!
பாகிஸ்தான் ஏவுகணைImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 May 2025 07:37 AM

பாகிஸ்தான், மே 04 : பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 450 கி.மீ தூரம் வரை செல்லும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து உள்ளது. அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, பயிற்சியின் ஒரு பகுதியை ஏவப்பட்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

வெடிக்கும் போர்?

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இதில் பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு, அவர்களுக்கு துணையாக இருப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

இதனல், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும், பல்வேறு நடவடிக்கையில் எடுத்து வருகிறது. மேலும், இருநாடுகளும் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

அண்மையில், இந்தியா விமானப்படை போர் விமானங்களை இறக்கி சோதனை நடத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் கங்கா விரைவுச் சாலையில் இந்திய விமானப்படை சோதனை முயற்சியில் ஈடுபட்டது. ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ, மிக்-29, மிராஜ்-2000, ஜாகுவார் உள்ளிட்ட முன்னணி விமானங்களை இறக்கி சோதனை நடத்தியது.

ஏவுகணையை இறக்கி சோதனை பார்த்த பாகிஸ்தான்

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தி இருக்கிறது. அதாவது, 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.  அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையை சோதனை நடத்தியதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனால், இருநாடுகளுக்கு இடையே மேலும் பதற்றம் அதிகரித்தள்ளது.  எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் உணவுகளை சேமித்து வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...