30 Dec 2025
Credit: Freepik
மூல நோய் என்பது ஒரு பொதுவான நிலை என்றாலும், மிகவும் வேதனையானது.
மூல நோய் என்பது மலக்குடல் மற்றும் ஆசனவாயின் உள்ளே அல்லது வெளியே வீங்கிய நரம்புகள் ஆகும்.
அந்தவகையில், மூல நோய் ஏன் ஏற்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
நீண்ட கால மலச்சிக்கல் குடல் இயக்கத்தின்போது அதிகப்படியான சிரமத்திற்கு வழிவகுக்கும். இது வெரிகோஸ் வெயின்களை ஏற்படுத்தும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது.
வாகனம் ஓட்டுதல், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவது ஆசனவாயின் நரம்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
வாகனம் ஓட்டுதல், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவது ஆசனவாயின் நரம்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் வயிற்று அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் மூலம் வரலாம்.
இதுதவிர எடை அதிகரிப்பும் மலக்குடலின் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி பிரச்சனையை உண்டாக்கும்.
அதிகபடியான மது மற்றும் புகைபிடித்தல் செரிமான அமைப்பை பலவீனப்படுத்தி மலச்சிக்கலை அதிகரிக்கும்.