15 AUG 2025
Credit: GETTY
பணிபுரியும் பெற்றோருக்குக் குழந்தைகளைப் பராமரிக்க பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் (Daycare) இன்றியமையாத தேவையாக மாறியுள்ளன.
மையங்களில் குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகள் பெற்றோரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
கூட்டுக்குடும்ப முறை குறைந்து தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால் முதியவர்களின் அரவணைப்பு குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
நம்பகமான மற்றும் பாதுகாப்பான மையங்களைக் கண்டறிவது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
நேரலை சிசிடிவி (CCTV) வசதி இல்லாத மையங்கள் மீது பெற்றோர்களுக்குப் போதிய நம்பிக்கை ஏற்படுவதில்லை.கேமராக்கள் மட்டுமே குழந்தைகளின் முழுமையான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை.
போதிய பயிற்சியற்ற ஊழியர்களால் குழந்தைகளுக்குத் தேவையில்லாத ஆபத்துகள் மற்றும் மன உளைச்சல்கள் நேரலாம்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பராமரிப்பு மையங்களுக்கு கடுமையான விதிகளை வரையறுக்க வேண்டும்.
அலுவலக வளாகத்திலேயே குழந்தை பராமரிப்பு மையங்களை அமைத்துத் தருவது ஊழியர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
குழந்தையின் பாதுகாப்பு குறித்த தொடர் சிந்தனைகள் பணிபுரியும் பெற்றோரின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
சிறிய எள் விதைகளில் பாலில் உள்ளதை விட மிக அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.