10 SEP 2026
Credit: Getty
அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மாவை நன்றாக மென்மையாகவும் மிருதுவாகவும் பிசைய வேண்டும்.
பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, சுமார் 30 நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
ஊறவைத்த மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிரித்தெடுத்த ஒவ்வொரு மாவு உருண்டையின் மீதும் லேசாக எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
மாவு உருண்டைகளை சப்பாத்தி கட்டை அல்லது கல்லில் வைத்து மிக மெல்லியதாக விரித்துத் தேய்க்க வேண்டும்.
விரித்த மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி சமமாகப் பரப்ப வேண்டும்.
மெல்லியதாக விரித்த மாவை விசிறி போல மடித்து சுருட்டி, மீண்டும் உருண்டை வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும்.
சுருட்டிய உருண்டைகளை கைகளால் மெதுவாக தட்டி பரோட்டா வடிவில் தயார் செய்ய வேண்டும்.
சூடான தவாவில் பரோட்டாவை போட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும்.