08 Apr 2025
Credit: Getty
முதலில் புளியை ஒரு கப் வெந்நீரில் ஊறவைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும்.
சிறிய வெங்காயம், பூண்டு பற்கள், தக்காளி ஆகியவற்றை நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் (நல்லெண்ணெய் இருந்தால் சிறப்பு) ஊற்றி சூடாக்கவும்.
அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி சேர்த்து மசியாகும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்போது புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
மிதமான தீயில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்றாக கொதிக்க விட்டால், சுவையான கார குழம்பு ரெடி